இசை - கணேசகுமாரன் #1

வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் பீத்தோவனின் கதைதான்.
மதுவுடன் இசையும் சேர்ந்து புனைவு ஒரு மாதிரி போதை ஏற்றுகிறது.
கதையை படித்துவிட்டு 'லூட்விக் வான் பீத்தோவனை' பற்றி படித்தபோதுதான் புரிந்தது புனைவு கிட்டத்தட்ட அவர் நிஜ வாழ்க்கையை உரசி நின்று கொண்டிருப்பதை.
சிறுகதை தொகுப்பு : பைத்திய ருசி
கதைசொல்லி : கணேசகுமாரன்

#100DaysOfReading

இப்பலாம் நான் புத்தகம் வாசிக்கிறது ம்ம்ஹ்ம்ம் வாசிக்கிறதே ரொம்ப கம்மியாயிருச்சி. Good reads challenge'ல மாசத்துக்கு ஒன்னுனு கணக்கு வெச்சி ஒன்பது மாசத்துல வெறும் மூணு புத்தகம் தான் படிச்சிருக்கன்.
அதான் இன்னைலேர்ந்து #100DaysOfReading, தினமும் ஒரு சிறுகதையோ இல்ல ரெண்டு மூணு கவிதையோ வாசிச்சே ஆகனும். டாட்.

மீண்டும் ஒரு ப்ரியா


முஸ்கி : இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும்...சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே :)

ரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை...இரவு 10 மணி...என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த இருபது நிமிட பயணத்திற்க்குள் நான்கு வருட கல்லூரி நினைவுகளுக்குள் நீந்தியே வந்துவிட்டேன்....ஆமாங்க என் கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சு...இனி கலாட்டா இல்ல...கூத்து இல்ல...ம்ம்ம் அந்த காதலும் இல்ல..இந்த நாலு வருசத்துல முலுசா சம்பாதிச்சது ஒரு முப்பது முப்பத்தஞ்சி நட்புகளை தான்..ம்ம்ம் எல்லாம் முடிஞ்சிபோச்...

ஊருக்கு போகனும்...அதுக்குத்தான் இப்ப கோயம்பேடு போயிட்ருக்கன்...டஜன் டஜனாக மக்களை உள்ளும்-வெளியும் தள்ளிக் கொண்டிருந்தது பேருந்து நிலையம்...எல்லா கைகளிலும் வாட்டர் பாட்டில் அல்லது அலைபேசி(கள்)...

கிருஷ்ணகிரி..ஓசூர்..பாண்டி...பாண்டி...விழுப்புரம்...கடலூர்...திண்டிவனம் என ஊர்களை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தனர்...நம்ம ஊர் பக்கம் செல்லும் பேருந்துகளை ஒரு வழியாக தேடிப் பிடித்ததில்..நின்று கொண்டிருந்தது ரெண்டே ரெண்டு தான்..சரி போறதுதான் போறோம்...அந்த புது வண்டிலதான் போவோமேன்னு ஏரியாச்சு...ஒன்னும் கூட்டம்லாம் இல்ல...

வழக்கம் போல் பக்கத்து சீட்டில் பெருசு-வழக்கத்திற்க்கு மாறாக முன் சீட்டில் ஃபிகர்...நீல நிற டீ-சர்ட்...அப்பாவோடத்தான் வந்தா..ஆனா அவர் நாலு சீட் முன்னாடி...எடம் இல்ல போல....பரவாயில்ல என் டார்லிங் சமந்தா அளவுக்கு இல்லனாலும் ஏதோ இருந்தா..ச்ச சுமாரா அழகா இருக்கா..அதுவும் சென்னை எப்டியும் பத்து பதினஞ்சி பாய் ஃப்ரெண்ட்சு இருப்பானுங்க என எதை எதையோ முணுமுணுத்தது மனசு..

வேகம் பிடித்தது பேருந்து..என் எண்ணங்களும் தான்...சென்னையை தாண்டியாச்...டிக்கெட்டும் போட்டாச்...அடுத்து என்ன லைட் ஆஃப்

எனக்கு தூக்கம் வரல...இருளில் நகர்ந்து கொண்டிருந்த நிழல்களை பார்த்துக் கொண்டே நகர்ந்தது நேரம்..


மணி 12ஐ தாண்டி ஓடிக் கொண்டிருந்தது..இஞ்சின் சத்தத்திற்கு இடையிடையே உச்ச்..உச்ச்....யாரோ எதற்க்கோ முனகுவது போன்றதொரு சத்தம் என்னை தொந்தரவு செய்தது...பெரியவர் ஒருவர் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார் அவரா இருக்குமோ...இல்ல பின் சைடு பச்ச கொழந்தய வெச்சிருக்குற பெண்ணா ? சரி நாம தூக்கத்தை வர வெப்போம்னு கண்ண மூடிக்கிட்டு கொஞ்ச நேரமிருந்தன்...மீண்டும் மீண்டும் அந்த உச்'...என்னை வெறுப்பேத்தியது

இங்கு யாரோ பக்கத்தில்தான்..சீட்டிலிருந்து சற்று நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்....ஆமாம் அவ தான்...அந்த சத்தம் அவகிட்டேந்துதான்..அந்த முன் சீட் பெண் தான்...

என்னவா இருக்கும்...மூட்டை பூச்சியா இருக்குமா ? இல்ல எதும் ஒடம்பு சரியில்லையா..ச்ச ச்ச பார்த்தா நல்லாத்தான இருக்கா

திரும்ப திரும்ப...உச்' சத்தம்...இப்போது ஒரு பக்கமாக ஒருக்களித்து கொண்டு...ஏதோ என்னிடம் பேச வருவது போலவே சிணுங்கிக் கொண்டிருந்தாள்

ம்ம்ம் நீண்ட நேர யோசனைக்கு பிறகு அலைபேசியை இயக்கி..அதன் வெளிச்சத்தை...அவளின் உச்'சிற்கு பதிலாக்கினேன்...சட்டென திரும்பியவள்..இதற்க்குத்தான் இத்தனை நேரமாய் காத்திருந்தது போல்...அவள் அலைபேசியில் எதையோ தட்டச்சி எனக்கு தெரிவது போல் காட்டினாள்..திரையில் இருந்தது hai

எனக்கொன்றும் புரியவில்லை...இப்படியொரு இரவில்..அப்படியொரு பெண்ணிற்க்கு என்னிடம் பேச என்ன இருக்க போகிறது..

சரி என்னதான் பாத்துடுவோமே...முன் சீட்டில் சாய்ந்து..அவளுக்கு மட்டும் கேட்கும் அளவான குரலில் ஹாய் என்றேன்...

பக்கத்து சீட் பெருசு...குறட்டையில் ரிதமிக் ஆர்கஸ்ட்ராவே நடத்திக் கொண்டிருந்தது...

அவள் காதில் கண்டிப்பாய் விழுந்திருக்கும்..ஆனால் இன்னும் ஒன்னும் ரியாக்ஷன் இல்ல..இப்ப என்னால முடியல

ச்ச இந்த பொண்ணுங்களே இப்டிதான்...ஒருத்தன கெளப்பி விட்டுட்டு போயிடுவாளுக...நாங்க இப்டி பொலம்பனும்

என்னதான் கல்லூரியில் எத்தனையோ பெண்களுடன் பேசிருக்கன்...பழகிருக்கன்..கடல போட்ருக்கன்..ஆனா இந்த நடு ராத்திரில வந்த  hai இந்த பாடு படுத்துகிறது...

அவ என்னதான் பண்றான்னு பார்க்கலாமேன்னு...பேக்க எடுக்குற மாதிரி எந்திருச்சி...பார்த்தா அந்த புள்ள தூங்கிடுச்சி....

ம்ம்ம் அவ எதுக்குதான் என்னதான் என்ட்ட பேச வந்தா...தெரிஞ்சே ஆகனும்...ஏதோ ஒரு தைரியம் எனக்குள்...டேய் 'அவள எழுப்புடா'ன்னுது

ஜன்னல் பக்கம் தான் அவள் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்..ஜன்னல் கேப்பில் லைட்டா கை விட்டு கையில் கிள்ளினால் போதும்...எந்திருச்சிருவா...பாத்துக்கலாம்

வழக்கமாக ஆடும் கைகள் இப்போது தைரியமாகவே இருந்தது...லாவகமாக கைகளை இயக்கி..முன் சீட்டிற்க்கு சென்றேன்

கை கையை தேடியது...ஆனால் தவறிப் போய் அவள் கைகளுக்கு அருகிலிருந்த மார்புகளை லைட்டா தொட்டுவிட்டது

மிரட்சியில் கைகளை வெடுக்கென உருவிக் கொண்டேன்.. நட்டுக் கொண்டன.......'முடிகள்'

அவளும் எழுந்துவிட்டாள்...ச்ச ஏண்டா ஏன்...அவள் என்ன செய்யப் போகிறாள் என்ற பயத்தை விட அந்த தொடுதல் தந்த கிறக்கமே மிக்கிருந்தது

இப்டி ஆயிடுச்சே..அவள் என்ன பண்ணுவான்னு பெஸ்ட் கேஸ்..ஒர்ஸ்ட் கேஸ் எல்லாம் மூளை ஆராய்ந்தது

1) சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பி..அவ அப்பா என் கழுத்தை பிடித்து பஸ்லேர்ந்து எறக்கி விடுவது
2) எதையும் வெளியே சொல்லாம..எங்கிட்ட மீண்டும் பேசாமல் அப்டியே செல்வது

அவள் என்ன செய்ய போகிறாள் என்ற ஆவல்.அதாங்க பயம் தாங்கமுடியல

கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு..அவள் அலைபேசியை எடுத்து..மீண்டும் எதோ ஒத்தினாள்

dai ennada loosu? :)

லூசா...இப்படி சம்பத்தமில்லாத  கேள்வி(பதில்) என்னை ஆச்சரியப்படுத்தியது

சரி இது வேற யாருக்காவது இருக்கும்..வெயிட் பண்ணுவோம்னு காத்திருந்தேன்..இல்ல யாருக்கும் அனுப்பல...அது எனக்குத்தான்

இப்போது அந்த சேதியை அழித்துவிட்டு..8056533228 என்ற நம்பரை டைப்பினாள்...

என்னடா இது...கத வேற மாதிரி போகுது...என்ன பொண்ணுடா இவ

என் கை தவறாவே பட்டிருந்தாலும்...ஒரு பொண்னு இப்டியா நடந்துக்குவா..பசங்கள முன்ன பின்ன பாத்திருக்கவே மாட்டாளோ

எப்டியோ நாம தப்பிச்சா சரி...அவ நெம்பரை போனில் சேமித்துக் கொண்டு

extremly sorry pa என்று மெசேஜை தட்டினேன்

k da...no worries என ரொம்ப ரிலாக்சாவே பதில் வந்தது

பிறகு ஊரென்னா...அப்பா என்ன பண்றாரு...அண்ணன் தம்பி இருக்கானுங்களா..ஒரே கடல கடலதான்..

அவ பேர உங்ககிட்ட சொல்டனா என்ன..இல்லல்ல...இவ பேரும் ப்ரியாவாம் :)

இந்த கிளுகிளுப்புளயே ஊர் வந்து சேந்தாச்சு...குட்டி தூக்கம் போட்டு எந்திருச்ச்ப்போ

3 message received

அவகிட்டேர்ந்துதான்...

dai rcharge me fr 50 rs da urgent

ஆஹா சனியன் சட பிண்ண ஆரம்பிச்சிடுச்சே..பொட்டு வெச்சு பூ  வெக்காம போவாதே ரைட்டு...priya3னு சேமித்திருந்ததை LOLனு மாத்திட்டன்

LOLனா என்னன்னு கேக்குறீங்களா...தெரியல..அதாங்க...லோலாயி :)








கோக்குமாக்கு - 29/08/11

ஹாய் மக்கள்ஸ் 


இளம் பதிவர்கள் சந்திப்பு

நம்ம ஜில்தண்ணி கடைய ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ரெண்டு வருசம் இருக்கும்னு நெனைக்குறன்...மொக்க போஸ்ட் போட்டாலும் அதுக்கும் கமெண்டுகளை வாரி வழங்கி என்னை வாழ வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி (அப்பாடா எப்டியோ பிட்ட போட்டாச்சி :))

இந்த பதிவால நிறைய நண்பர்கள் கிடைச்சாயிங்க...நிறைய பேருகிட்ட ஆன்லைன்,மொபைல்'லதான் பேசிகிட்டு இருக்கன்...எல்லாரையும் நேரடியா சந்திக்கனும்னு ஆசை...அது கூடிய சீக்கிரம் கொஞ்சமாவுது நிறைவேற போவுதுன்னு நெனைக்குறன் 

சென்னை யூத் பதிவர் சந்திப்பாம்ல...என்னதான் நடக்குதுன்னு பாத்துடுவோமே :)

________________________________________________________________________________

 தமனை கேளுங்கள்

யப்பா...சான்சே இல்ல,வர வர தமன் போடுற லவ் சாங்ஸ்லாம் செம்ம பீட்டுதான் போங்க....வந்தான் வென்றான் பாடல்களை ஒரு முறை கேட்டுதான் பாருங்களேன் தெரியும் :)

________________________________________________________________________________

I quit facebooking...

ஹீ ஹீ ரொம்ப அடிக்ட் ஆயிட்டன்..சோ வேற வழியே இல்ல...அதான் De-activate செஞ்சிட்டன் ...இனி ஒன்லி ப்ளாகர் மட்டும் தான் :)

_________________________________________________________________________________

ஆவின் பால்

டெய்லி கரெக்டா பல்லு வெளக்குரனோ இல்லியோ...ஆவின் பால் குடிக்க மறக்குறதே இல்ல...மாலை 5 மணி ஆயிட்டுனா...வாய் நம நமங்குது....கிண்டி வந்து ஆவின் பால் குடிச்சிட்டுதான் வீட்டுக்கு போறதெல்லாம் :)

_________________________________________________________________________________

டிஸ்கி :  ரொம்ப நாள் எழுதாததால ஃப்ளோ இல்ல...அதான் இத்தோட முடிச்சிக்கிறன்.......) :)

3


முஸ்கி :  யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல :)

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). அழகான பெண்கள்
ஆ). பேசிக் கொண்டே இருப்பது (ஆண் நண்பர்களிடமும் தான் :) )
இ).  இசை

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). என்னை விரும்பாத அழகான பெண்கள்
ஆ). தனிமை
இ).  வெட்டி பந்தா

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). வேகமாய் பயணிப்பது  
ஆ)  என் எதிர்காலம் ? 
இ).  என் க்ளோசப் போட்டோ 

4.புரியாத 3 விசயங்கள் :

அ).  கணக்கு
ஆ). பெண்கள்(இதுக்கும் கணக்குக்கும் சம்பந்தமில்ல :))
இ).  செல்வா கதைகள்

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ).  நான்
ஆ). படிக்கிறன்னு காட்டிக்க பத்து பதினைந்து புத்தகங்கள்( ஆ.வி,குமுதம்,குங்குமம் இல்ல)
இ).  லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள் 

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). நானும் பதிவெழுதுவது
ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள்
இ).  அவ்ளோதான் . 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ).  யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன் 
ஆ). மொக்கை போடுவது
இ).  ஜில்தண்ணி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சன் ஆனா.......

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :) 
ஆ).ஒரு சிறுகதையாவது முழுசா எழுதனும் 
இ).  ட்ரம்சு கத்துக்கனும் 

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). இன்னும் ஓர் இரவு ( கற்றது தமிழ்)
ஆ).நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை( வாரணம் ஆயிரம்)
இ). பேசுகிறேன்...பேசுகிறேன்

14.பிடித்த 3 படங்கள் :

அ). கற்றது தமிழ்
ஆ) தளபதி
இ). வாரணம் ஆயிரம்

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). இணையம்
ஆ). என் டப்பா அலைபேசி
இ).  வெட்டி பேச்சு



டிஸ்கி
: யாருக்காவத் பதிவு போட ஒன்னுமில்லனா இத தொடர் பதிவா போடுங்க...முடிஞ்சா அதுல மேதகு ஜில்தண்னியார் அவர்களுக்கு நன்றின்னு போட்டால் வீட்டுக்கு எதாவ்து கிஃப்ட் வாங்கி அனுப்புறன் 

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

ஆ........

அப்போது மணி  இரவு  எட்டை தாண்டியிருக்கும் ப்ரித்வி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தான், முறுவலா ஒரு தோசை என்று சித்தியிடம் ஆர்டர் செய்துவிட்டு எண்ணெய் ஜாடியை எடுக்க விழைகையில் ஒரு சத்தம்

டொக் டொக் !!
ஹாய் மச்சான்  !!

நண்பன் மணி அரட்டை பெட்டியில் கூப்பிடுரான் ஹாய் மச்சி தோ வாரேன்னு இவன் உரத்த குரலில் தன்னை அறியாமல் கத்திவிட, சித்தி டேய் என்னடா யாருகிட்ட பேசுற இங்க யாருமே இல்லயே, எதாவது போன் கீன் வந்துச்சாடா

சீ ஒன்னுமில்ல என்று தலையில் தட்டிக் கொண்டு தோசை போன்றே முறுவலான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்தான்.

மாடிப் படிகளில் சட்டென தாவி மேல சென்ற போது கடிகாரம் சரியாக 9.30 ஐ காட்டிக் கொண்டிருந்தது, சரி எதாவது படிக்கலாமேன்னு அலமாரியில் கலைந்து கிடந்து புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாலு பக்கம் மேய்ந்து கொண்டிருக்கையில் 

இன்னும் ஓர் இரவு ! இன்னும் ஓர் நிலவு  
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா ! 
என் நெஞ்சிலொரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் !! 
இரும்பிலே இருதயம் முளைக்குதே !

என்று கன்னாபின்னாவென்று பாடல்கள் மாறி மாறி  இவன் காதுமடலருகில் காட்டுக் கத்தலில் ஒலித்துக் கொண்டிருந்தது, மண்டையே வெடித்துவிடும் போன்ற உணர்வு  மூளை நரம்புகள்  முறுக்கிக் கொள்வைதை போல ஒரு வலி, சட்டென தன் காதில் இருந்த ஹெட்போன பிய்தெடுக்க முயற்ச்சிக்கையில் காதில் ஹெட்போனே இல்லை, பின் எப்படி இந்த சத்தம் 

அலைபேசியை சுண்டிப் பார்க்கையில் அதிலும் பாடவில்லை, அந்த சத்தத்தின் படபடப்பு அடங்கவில்லை, ஜன்னலில் எட்டிப் பார்த்தான்...மொட்டை மாடியில் ஏறி தெருவை வெறித்து பார்த்தான்...குளிரில் குட்டி நாய் ஒன்று அலரிக் கொண்டிருந்த சத்தம் மட்டும் தான்..அப்படி ஒரு அமைதி...


பதட்டத்தில் பத்து படிகள் மதமதவென குதித்திறங்கி ஆக்வாசியூரில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மூன்று தம்ளர்கள் குடித்திருப்பான்..அப்போது சித்தப்பா காலை சாப்பாட்டுக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார் ..அவரிடம் இதை சொல்லலாமா என்று ஒரு நொடி  யோசிக்கையில் அனிச்சையாக கால்கள் படிகளில் செலுத்தப்பட்டு மீண்டும் மாடிக்கே வந்தான் 

இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை...இதை டைரியில் எழுதிவிடுவொம், என்னன்னு அப்பரம் ஓசிக்கலாம்னு..தன் மெத்தைக்கடியிலிருந்த டைரியை எடுத்து பிப்ரவரி 16-ஐ தேடி  இந்த உணர்வை எப்படி எழுதுவது என்று மனசுல ஒருவாரு எழுத்துக்களை கோர்த்து கொண்டு 
எழுத பேனாவை டைரியில் கைவைக்க அங்கொரு அதிர்ச்சி 

தான் மனதில் கோர்த்த எழுத்துக்கள் டைரியில் அச்சுபிசகாமல் அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் டைரியை வீசிவிட்டான்...இரவின் தனிமையில் பயம்  என்னவென்றே புரியாமல் மொசேக் தரையில் சப்பணக்கால் போட்டுக் உட்கார்ந்து தலையை சொரிந்து கொண்டே இருந்தான் 

தலை முடியெல்லாம் உதிர்ந்து தலைபாரமே இல்லாமல் போன்றிருந்தது  ....தன்னையறியாமல் கண்கள் சொக்கிப் போய் தரையிலேயே தூங்கிப் போய்விட்டான் ப்ரித்வி...

காலை பத்து பதினோரு மணியிருக்கும் மீண்டும் அந்த சத்தம் 
 
டொக் ! டொக்
 
இப்போது கணிப்பொறிக்குள்ளிருந்து வந்தது..மேசையிலிருந்த சுட்டியை திரையில் நகர்த்தி க்ளிக்கி இவனும் ஹாய் மச்சான் என்று அரட்டையடிக்க ஆரம்பித்தான்

டிஸ்கி :   என்ன பண்றது இந்த சுஜாத புத்தகங்கள படிக்கிறதும் , கம்பிபிட்டர  நோண்டுறதுமே பொலப்பா இருந்தா இப்பிடித்தான் எதாவது சம்மந்தமில்லாம  தோணுமாம் 




மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா?

நன்றி மகேஷ்  : ரசிகன் 
மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman


அடச்சீ...

புதுவருசம் வந்துட்டு...இந்த வருசத்துல எதாவது ஒன்னாவது உருப்படியா செஞ்சி கிழிச்சிருக்கோமான்னு பாத்தா அப்டி ஒன்னுமில்ல..சரி வரும் வருசத்துலையாவது எதையாவது செய்வோம்(இன்னும் எத்தன வருசத்துக்குடா இதே டயலாக்க விடுவீங்க :( )

 சரி மேட்டருக்கு வருவோம்....
 மூஞ்சிபுத்தகம் அதாங்க FACEBOOK.. நம்மாளுங்க பாஷையில் சொல்ல போனா ப்ளாகரை போல ஓசி-யில் கும்மியடிக்க கிடைத்த இன்னொரு வரப்பிரசாதம்..அவ்ளோதான் 

இங்கும் ஆண்களுக்கு நிகரா பெண்கள் வலம் வருவதில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம் தான், ஏன் இங்கும் பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள் 

 நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும்,  நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?

இது ஒரு ஃபேசனாவே ஆயிட்டு....பேஸ்புக்குல போடுறத்துக்காவே  ரகம் ரகமா போட்டோ எடுக்குறாயிங்க...இவிங்க

போன வாரம் ஒரு பெண்ணின் போட்டோவை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தபோது...அதிலிருந்த கமெண்டுகள்...ச்சீ  இப்டி கூடவா கெளம்பிருக்காயிங்கன்னு சொல்ல வைத்துவிட்டது

அப்பெண்ணின் உடலை வர்ணித்து இப்படி அப்படி என்று..ஆங்கிலத்தில் கேவலமாக எழுதியிருந்த அத்தனை பேரின் பேரும் இப்படித்தான் இருந்தது..john silverstock, mary brown, peter smith  எல்லாம்  வெளிநாட்டு ஆளுங்களா இல்ல நம்மாளுங்களே இப்டிபட்ட பேரில் திரியிராயிங்களான்னு தெரியல :(

 

எங்க போனாலும் எல்லா வகையான ஆளுகளும் இருக்கத்தான் செய்யுறாயிங்க... நாமதான் கவனமா இருக்கனும் :)


 தாய்குலமெ  உங்களுக்குத்தான் சொல்றன் கேட்டுக்கங்க 


 நாம் பொழுதுபோக்குக்காகவும் நட்புகளை ஆராதிக்கவும் இந்த மூஞ்சிபுத்தகம் இன்றியமையாத ஒன்றாயிட்டு..சரிதான் ஆனாலும் நீங்கதான் உசாரா இருக்கனும் 


##  தெரியாத நபர்களை சேர்க்கவே சேர்க்காதீங்க


##  போட்டோக்களை  இங்கு அப்லோடு செய்து.. நீங்களே மாட்டிக்காதீங்க. நாளக்கி உங்க  போட்டோக்களிலும் இது மாதிரி கேவலமான பின்னூட்டங்கள் வரலாம், அதுமட்டுமில்லாம உங்க போட்டோவ அலாக்கா தூக்கி பல்வேறு கேவலங்களுக்கு பயன்படுத்தும் கயவர்கள் இணையத்தில் பலர் வலம் வருகிறார்கள் என்பதையு  மறந்துடாதீங்க 


##  அப்படியே உங்கள் நண்பர்களுக்கு போட்டோக்களை காட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு  மின்னஞ்சல்(E-mail), அதுல பகிர்ந்துக்கங்க 


##  பேஸ்புக்கில் நிறைய  கட்டுப்பாடுகளும் இருக்கின்றன..அவைகளும் பயன்படுத்துங்க...


Facebook privacy settings 

# நம்ம குரு சுடுதண்ணி அவர்களின் இந்த இரண்டு பதிவும் கண்டிப்பா உங்களுக்கு பயன்படும்..படிச்சி பாருங்க


இணையத்தில் புகைப்படம் வெளியிடும் முன்- 1 

இணையத்தில் புகைப்படம் வெளியிடும் முன்- 2



அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

மாறியவை மாற்றியவை

முஸ்கி : நம்ம கடைய சரியா தொறக்குறதில்லன்னு நிறைய பேர் வருத்தப்படுறாங்க , சரி விடுங்க இனி ஜில்தண்ணி - எப்போதும்  சூடா (ஹீ ஹீ) கிடைக்குமுங்கோ



யார் இவன் ?

சென்னை - மாறியவையும் மாற்றியவையும் 

 நாலைந்து மாசம் தூங்குவதையே பொழப்பா ஓட்டிகிட்டு இருந்தன், இங்கு சென்னை வந்ததும் நானும் எந்திரம் சுழற்சியாய் ஓட ஆரம்பித்து விட்டேன், ஊரில் அனுபவித்த நிறைய சந்தோசங்கள் இங்கு காணாமல் போயின,ஆயினும் இங்கு இருப்பதையே சந்தோசமாக அனுபவிக்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டது

ஆஹா என்ன ஒரே தத்துவமா வருது :) சரி ப்ளே(ட்)ட  மாத்துவோம்

## எங்க ஊர்ல ஒன்னு ரெண்டு ஃபிகர் தான் உருப்படியா பாக்க லெட்சனமா இருக்கும்...அது பின்னாடி ஒரு ஊரே க்யூ கட்டி நிக்கும்...இதுல நாமலாம் எங்க டூயட் சாங்க போடுறது....

## ஆனா இங்க சென்னைல எல்லா வகையான ஃபிகர்களும் இருந்தும் பார்க்க தான் நேரமில்லை ஓடிக்கினே இருக்கன் (ஏன் நீங்க எதாவது ஓட்டப் பந்தயத்துல கலந்துக்க போறீங்களான்னு கேக்க பிடாது )


## அப்பரம் கைலின்னு ஒன்ன இடுப்புல சுத்திகிட்டு திரிஞ்ச பய இப்ப கலர் கலரா டிராக்ஸ் தான் போடுறது (ஹ்ம்ம்ம் என்னத்த சொல்ல)

## முப்பது ரூவாய்க்கு முடி வெட்டி ட்ரிம்மிங்கும் பண்ணிடுவன் ஊர்ல, இங்க எண்பது ரூவா கேக்குறானுங்க கேட்டா அது சலூன் இது மென்ஸ்  பியூட்டி பார்லராம் (அதே மயிரத்தானடா இங்கயும் புடுங்குறீங்க)
 

## இந்த காதுல செவுட்டு மிசின் மாதிரி ஹெட்போன்....போட்டுட்டு அலைறானுகளே இவனுகன்னு கேட்டவன் இப்ப நானும் இந்த ஹெட்போனை எப்ப பாத்தாலும் காதுல மாட்டிகிட்டு இசையை ரசிக்கிறன் ( ஆமாம் ரசிக்கிறாறாமா மனசுல இளையராஜா பேரன்னு  நெனப்பு)


# தோழி(கள்)  தேவை அப்டின்னு பதிவே போட்டவன்... காலேஜில் போடுற மொக்கையில ஏகப்பட்ட ரசிகைகள்(ஐ மீன் தோழிகள்)  கிடைச்சிட்டாளுங்க
( அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா நீ :))

 
 # அப்பரம்  இதுக்கு ஒரு போஸ்டே போட்டு கொண்டாடிருக்கனும்.. ஆமாங்க என் ட்விட் ஒன்னு ஆனந்த விகடன் வலைபாயுதேல போட்டுட்டாயங்க
( ரொம்ப பழசு தான் )

பார்க்க : என் ட்விட் இடம் பெற்ற ஆனந்த விகடன்

டிஸ்கி  : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)

அழகு + நட்பூ

 "எதையும் அழகாக ரசிக்கலாம் அழகான மனமிருந்தால்"

மூக்கும் முழியுமாய் ஏமி ஜாக்சன் கலரில் இருந்தால் தான் அழகா, எதுவும் அழகு தான் என் மனம்  அழகாக இருப்பதால்

சாக்கடை முதல் சாக்லெட் பேப்பர் வரை
எல்லாம் அழகாகவே தெரிகிறது 

ச்சீ என்று விரட்டும் நாயை தோ என்று அழைத்து கொஞ்சினால் அழகுதான், ஆமாம் இதெல்லாம் எனக்குள் எப்படி வந்தது 


ஆம் அவள் தான் அவளே தான், என் கருகிப் போன இதயத்தை கலர் கலராய் மாற்றியவள் தான்

நிறைய மாறிவிட்டேன் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன், எனக்குள்ளும் ரசனையை விதைத்துவிட்டாளே

நான் கூட கவிதை எழுதுறேன்னா பாத்துக்கங்க :)


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"இப்படித்தான் இருக்கணும் என்றது காதல், எப்படியும் இருக்கலாம் என்றது நட்பு என் நட்பு "

 கட்டுப்பாடற்ற காட்டாறாய் கூட இருக்கலாம் நட்பு,  வாடான்னா போவான்  அடிடான்னா கடிப்பான், எதாவது வம்பு பண்ணிக்கிட்டே இருப்பான், எல்லாம் நட்பு தான்

இந்த அழகான நட்பூ சில நேரங்களில் செயற்கை பிளாஸ்டிக் பூவாக கூட இருந்துவிடும் போது ஏமாற்றங்கள் எனக்கு மட்டுமே :(


 நட்பூ  பூக்கட்டும் இயற்கையாய்

டிஸ்கி : மொக்கையாயிட்டுன்னு தெரியுது இருந்தாலும் எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க :)
 

விவசாயாமா அப்டின்னா ?

நாத்து பறிப்பது முதல் களையெடுத்தல்,அறுவடை வரை மனிதசக்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து கொண்டிருந்த நாம் இப்போது அத்தனையையும் எந்திரத்தை வைத்தே செய்து முடிக்கிறோம் .

எல்லாம் அறிவியலின் சாகசங்கள் தான்.ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த அறிவியல் உன்னதங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய நிலங்களே இருக்காது என்பது தான் கவலைக்கிடம்.

என் தாத்தா விவசாயநிலத்தில் இறங்கி உழைச்சாங்க ,அப்பா சாப்பாட்டுக்காவது வேண்டுமேன்னு விவசாயம் செய்றாங்க.அடுத்து நானோ வயல்களில் கால் வைப்பதை கீழ் தரமாக நினைக்கிறேன்,எங்கப்பாவால் முடியும் வரைதான் விவசாயம் அடுத்து அந்த நிலத்த ப்ளாட்டா மாத்திடுவேன் அவ்ளோதான்.

இது என்னோட எண்ணம் மட்டுமல்ல.இதுதான் இப்போதைய நிலைமை.




பல பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்யும் முதலாளிகள் முதல் ஒரு வேலி நிலமே வைத்திருக்கும் சாதாரண கூலி வரை தங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் வாங்க ஒரு அரசு உத்தியோகத்திலோ அல்லது வேறு நல்ல வேலையிலோ அமர வைப்பதுதான் அவர்களின் ஆசையாகவும் கடமையாகவும் இருக்கிறது.

தான் பட்ட கஷ்டம் மகனும் படக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணம் அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

இப்படி படித்து நல்ல வேலையில் அமருகின்றோம் ,அப்பா இருக்கும் வரை விவசாயத்தை கருமமேன்னு செய்கிறார். அதன்பின் கொஞ்ச நிலமாக இருந்தால் உடனே பைசல்,அதிகமா இருந்தா ப்ளாட்டுகள் தான், யார் விவசாயமெல்லாம் செய்யுறது ?

இந்த எண்ணம்தான் மாறனும், நம்  உணவுத் தேவையையாவது நாமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்காவது விவசாயம் செய்யனும்.

நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!

முடியுமா நீங்க சொல்லுங்க ?

நானும் அந்த 140 எழுத்துக்களும்

என்னத்த சொல்றது போங்க, இப்பலாம் எது யோசிச்சாலும் சரி எழுதினாலும்  சரி எல்லாமே சின்னாதாவே வருது,பரிட்சையில 16 மார்க் கேள்விக்கும் ரெண்டு மார்க் கேள்விக்கும் ஒரே அளவு பதில் தான் வருது

எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்,அவன்தாங்க ட்விட்டர் , இனி பரிட்சை கேள்வி தாளில் எல்லா வினாக்களுக்கும் 140 எழுத்துக்களில் விடையளின்னு   இருந்தா கூட தேவலாம் என்கிற அளவுக்கு என்னை ட்விட்டர் அடிமையாக்கி இருக்கிறது

நிறைய மொக்கை கவிதலாம் எழுதுறன் அதுக்கு காரணம் "அவள்" இல்ல ட்விட்டர் தான்,இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா என்னோட பதிவும் 140 எழுத்துக்கு சின்னதா  ஆனாலும் ஆகும்

ட்விட்டர் இன்னக்கி இணையத்தின் இன்றியமையாததாகிவிட்டது, ட்விட்டருக்கு  முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )


எது நடந்தாலும் ஊருக்கு முன்னாடி  முதல்ல ட்விட்டேருக்கு சொல்லிடுறேன், வாந்தி வந்தாலும்  சொல்றன், பூந்தி தின்னாலும் சொல்றன், மொத்ததுல ட்விட்டர் ஒரு குட்டி நண்பன்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி வந்தது வந்துட்டீங்க சில பல  ட்விட்டுகளை   படிச்சிட்டு போங்க :)

@@ அவள் அன்று கண்களால் கடித்ததால் ஏற்ப்பட்ட காதல் புண் இன்று வடுவாகியும் சுகமாய் வலிக்கிறதே #காதல் சுகம்

@@ போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்


@@ அன்று என்னவளின் ஏகாந்த சிரிப்பினில் ஏழையாய் ஏமாந்து போனதன் விளைவு இன்று என்னையே எனக்கு எவனென்று தெரியாமல் எத்தனிக்கிறேன் #toolate   
 
@@ தோழியிடம் மீசையை எடுத்தால் கமல் மாதிரி இருப்பேனா என்றேன்,ஆம் என்றாள் எடுத்துவிட்டேன் அப்பரம் தான் சொல்கிறாள் அது "குணா" கமல் என்று #அழகு
 
@@ மூன்று வருடம் முக்கி முனகி அவள் முன்னால் மண்டியிட்டு மாரடித்த மணித்துளிகளில் மரணித்து மக்கியிருந்தால் மனிதனாயிருக்கலாம் #toolate   

@@ அவளின் நினைவலையின் எச்ச சொச்சங்களை பொறுக்கி பொட்டலம் போட்ட நேரத்தில் அப்பா கடையில் பொட்டலம் போட்டிருந்தால் எப்பவோ பொழச்சிருக்கலாம் #toolate 

@@ என்னதான் செக்க செவேலுன்னு இருந்தாலும் சேட்டு பொண்ணுங்கள பாத்தா ஜொள்ளு விட தோணல #என்னுமோ தெர்ல

டிக்கெட்

காலை 8.30 மணி - பேருந்து நிலையம்

காலேஜ் வழியா  செல்லும் நகரப் பேருந்து வருதான்னு எட்டி பார்த்த பிரபாவுக்கு அவன் ஃபிகர் அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்த போது  ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

என்னடா எப்போதும் காலேஜ் பஸ்லயே போயிடுவா,இன்னக்கி இங்க நிக்கிறா,சரி நமக்கடித்த அதிர்ஷ்டம் என்று தன்னுள் சொல்லிக் கொண்டு சிரித்தான் அவன்

பேருந்தும் வந்தது அவள் அசால்ட்டாக முன் புறம் ஏறி நின்று கொண்டாள், நண்பர்கள் டேய் அடுத்த பேருந்தில் போகலாம் டா என்று கத்தியும் காதில் விழாதது போல் அவனோ பின் புறமாக முட்டி மோதி அவளுக்கருகில் போய் நின்றான்

முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்


இவ்வளவு நெருக்கத்தில் பிரபா இதுவரை அவளை பார்த்ததில்லை,கிறக்கத்தில் அங்கு நடந்தது யாவும் ஊமைப் படமாகவே தெரிந்தது அவனுக்கு

அங்கு எவனோ இந்த பாடலை வேறு ஓடவிட்டிருந்தார்கள்

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை

திடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈரென்று     சடன்      பிரேஏஏஏஏஏஏஏஏஏஏஏக்
போட்டு ஓரங்கட்டினார் டிரைவர்

காரணம் டிக்கட் செக்கிங் செய்கிறார்களாம்

வெள்ளை சீருடை அணிந்த இருவர் இரு பக்கமும் நின்று கொண்டு ஒவ்வொருத்தராக செக் செய்தனர்

அப்போது தான் பிரபாவுக்கு தோணியது ஆஹா நாம டிக்கட் எடுத்தோமா தெரியலயேன்னு  சட்டை பையை துழாவியதில் கிடைத்தது சில சில்லரை காசுகள் மட்டுமே

ஒவ்வொருவராக  டிக்கெட்டை காட்டிக் கொண்டிருந்தனர்

பிரபாவுக்கு இப்போது முற்றிலும் வியர்த்து விட்டது

ஆஹா டிக்கெட் எடுக்கலன்னா இவனுக எப்புடியும் ஒரு 150 ரூவாயாவது தாளிச்சிருவானுங்க,ரூல்சு பேசினா ஃபைன் 500 கட்றியான்னு கேப்பாங்க

அவனுக்கு என்ன செய்வது என்று புரியல,இப்ப பையில் இருப்பது எல்லாத்தையும் தேத்துணா கூட முழுசா முப்பது ரூவா கூட தேறாது,பயலுவோ கூட வந்தாலாச்சும் அவனுகளாவது எதாவது வழி செய்திருப்பானுங்க  என்று பல கோணங்களில் இருந்தும் யோசனை வந்தது

இந்த பொண்ண பாத்து வாய பிளந்து பேருந்தில் ஏறினது என் தப்பு  என்று தலையிலடித்துக் கொண்டான்

அதற்குள் அந்த டிக்கெட் செக்கிங் ஆசாமி அவனை பார்த்து டிக்கெட் எங்கப்பா எடுத்து குடுத்துட்டு போப்பா,காலேஜுக்கு மணி ஆகலயா இன்னும் ?

அவன் என்னுமோ பத்து இட்லியை வாயில் வைத்திருப்பதை போல் "டிக் டிக் டிக்கெட்" என்று மழுப்பி விட்டான்

அதற்குள் அந்த ஆசாமி " ஓ உங்கிட்ட இருக்குறது பஸ் பாசா,சரி அத காட்டு"

அப்போது தான் பிரபாவுக்கு 300 வாட் பல்பு எறிந்து  நினைவுக்கு வந்தது,ஆமாம் நம்மகிட்டதான் பஸ் பாசு இருக்குள்ள,அப்பரம் என்ன பயம்...

பிரபா தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் " சே அந்த பொண்ண பாத்ததும் இது கூடவா மறந்து போகும் மரமண்டையாட நீ "

டிஸ்கி : இது உனக்கு நடந்த உண்மை கதையான்னு யாராவது கேட்டீங்க,அப்பரம் ஆமான்னு சொல்லிடுவேன் ஆமாம் :)

கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

கோக்குமாக்கு -- 03 / 09 / 10

குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு

என்னடா குவாட்டர் அடிக்க காசு கேக்குறானான்னு பாக்குறீங்களா, சீ நான் ரொம்ப நல்ல பையன் ,சரக்க அடிக்காத எனக்கே இப்டி மப்பு ஏறிடிச்சுனா,உங்களுக்கு சொல்லவா வேணும்

வேற ஒன்னும் இல்லங்க குவாட்டர் கட்டிங் பட பாடல்களை தான் சொல்றேன்,மெய்யாலுமே செம கிக்கு ஏறுதுங்க,பாடம் வரிகளும் தாரு மாறு 


குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்குமடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவாட்டரு மேட்டரு கிடைக்கலயே

ஓசில குவாட்டர் கட்டிங் ஊருகாய் டயலாக்குகளுடன் தராங்க,சும்மா எடுத்து குடிங்க :)

குவாட்டர் கட்டிங் உபயம் : தயாநிதி அழகிரி (படத்துலயும் நீங்க தானா)

====####====####====####====####====####====####====####====####====####====

6காட்டாருக்கு நான் ஒரு பெரிய நன்றி சொல்லியே ஆகனும்,எப்ப பாத்தாலும் இந்த பொட்டி முன்னாடியே குந்திகினு இருப்பேன், இப்பதான் தினமும் மூணு மணி நேரம் எங்கூர்ல கரண்ட அடக்கிடுரானுங்களா,வேற வழியே இல்லாம புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சுட்டன்

இப்ப படிச்சிகினு இருக்குறது பா.ராகவன் சாரின் "தலிபான்" என்ற புத்தகம்

====####====####====####====####====####====####====####====####====####====

எங்க போனாலும் இந்த பாகிஸ்தான் என்றாலே பிரச்சன தானா,பாகிஸ்தான் வீரர்களுக்கு இது ஒன்னும் புதுசு கிடையாது, நல்ல ஃபார்முல விளையாடிக் கொண்டு இருப்பானுங்க,திடீர்னு கப்பு வாங்குவானுங்க,திடீர்னு சஸ்பெண்டும் ஆவானுங்க,இதே பொழப்பா போச்சு  

அதிலேயும் ஆசிப் போன வருசம் ஊக்க மருந்து பயன்படுத்தியாதா கண்டுபுடிக்க பட்டு ஒரு வருசம் ஓரமா ஒக்கார வச்சாங்க, அந்த ஒரு வருசத்துல ஒரு ஃபிகரையும் நல்லா உசார் பண்ணிட்டாரு, இப்ப திரும்பவும் சூதாட்ட மேட்டர்ல மாட்டிகிட்டாரா,பாவம் ஆசிப்பு

ஃபிகரும் போச்சு,மானமும் போச்சு(அது இருந்தா தான) எல்லாமே போச்சு :)




====####====####====####====####====####====####====####====####====####====

ரொம்ப நாளா நம்ம குத்தாலத்தான் மூஞ்சி புத்தகத்துக்கு வா வான்னு கூப்டுகிட்டே இருந்தான்,சீ என்னாடா இருக்கு அதுலன்னு நான் போகவே இல்ல

இப்பதான் FACEBOOK PROFILE  கிரியேட் பண்ணிருக்கேன், ட்விட்டர் மாதிரிலாம் இல்ல ரொம்ப போர் அடிக்குது

யாராவது போட்டா,கீட்டா,வீடியோ,கீடியோன்னு அப்லோட் பண்ணுனா பாக்கலாம் அவ்ளோதான் ஒன்னும் தேறாது :(

====####====####====####====####====####====####====####====####====####====

ஞாயிற்றுக் கிழமை முதல் நானும் சென்னைவாசி ஆகப் போறேன் அதாங்க  வரும் திங்கள் கிழமையிலிருந்து காலேஜ் போகணுமாமே, ஆஹா இனி கும்பளா கும்மி அடிக்க முடியாதேன்னு ரொம்ப  கவலையா இருக்கு :(

எந்த காலேஜுன்னு கேக்குறீங்களா அதாங்க Eeshwari college of engineering,ramapuram

சென்னைக்கு நான் புதுசாச்சா ஒரு மாசத்துக்கு ஒரு ரூட்டும் எழவும் புரியாது அதையும் தான் பாப்போம் என்ன நடக்குதுன்னு :)

இனி ஜில்தண்ணி சென்னையிலிருந்து சப்ளை செய்யப்ப்டும்

இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்

தூக்கம் எதிரியாய் தெரியும் சில இரவுகளில் மனதில் கிறுக்கியவை சில

*** இரவுக் கவிதைகள் ***


அவளெனும் 
வீணையை மீட்டினேன் 
உச்சஸ்தாயியில் 
பிறந்தது 
மௌன ராகம்....

###############################

இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ 
அந்த 
அழகின் இலக்கணத்திற்கு 
முன்னால்

###############################

அன்று 
வெட்கச் சிணுங்களில் 
ஒளிந்து மறைந்தவள் 
இப்போதும் 
சிணுங்குகிறாள் 
என்னுள் 
ஒளிந்து கொண்டு 
 
###############################
 
அவள்
பார்வையால் 
தீணி போடாததால் 
இப்போது பசியெடுத்து 
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
 
 
 *** இரவல் கவிதை  ***
 
எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க, அதான்  ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தோழி மதுர பொண்ணுகிட்ட சில கவித எழுதி கேட்டேன்...அதையும் பாருங்க

அன்பே உன் நினைவலைகள்
கனல் நெருப்பாய் என்னை
கடந்து செல்வதால்
கண்களை மூடினாலும்
அதிலும் நீ மட்டுமே தெரிகிறாய்.
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உனக்கான அழகிய கவிதையொன்றை
அலசி கொண்டு இருந்த போது
உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
பறந்து வந்தமர்ந்தது 
அதுவோ
உனக்கான கவிதை இந்த
உலகத்தில் இல்லை என்ற
செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

இதென்ன கல்வியா ?

முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி  நம்ம  ரவுண்டு தான் 

 பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று

இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில்  முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்


அரசு பள்ளிகளிலிருந்துதான் விளையாட்டுத் துறைக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்பது சந்தோசத்திற்குரிய விசயம்,ஏன்னா முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வாய்க்காத ஒன்றாகிவிட்டதே

விளையாட்டுத்தான் சொல்லித் தரல பாடமாவது ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறானுவோளா இந்த மெட்ரிக் பள்ளிகளில் என்று பார்த்தால்,அதுவும் கவலைக்குரிய நிலை தான்

நான் படித்த மெட்ரிக் பள்ளி ஒன்றின் நிலைமையை பாருங்களேன்

@@  விளையாட்டுதான் இல்லையென்பதால் மைதானமும் இல்லை

@@  ஆசிரியர்களாக  பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க

@@   LKG வகுப்புக்கு பாடம் நடத்துபவர் பட்டதாரியாக இருக்க வேண்டாம், பத்தாம் வகுப்புக்கு நடத்துபவர் கூட  பட்டம் பெற்றவராக இல்லையே
 
@@  கல்லூரியில் வேதியல் படித்தவரை இங்கு வரலாறு நடத்த சொல்கிறார்கள்,அவரும் நடத்துகிறார் (வேறு வழி)

@@   ஒரு எழவையும் மாணவர்களுக்கு நடத்தாமல் பொட்ட மனப்பாடம் செய்ய சொல்லி பரிட்சை எழுத வைக்கிறாங்க

@@  விளையாட்டுமில்ல,பாடமும் நடத்த வக்கில்ல  டாய்லட் கூடவா சுத்தம் செய்யாமையா இருக்கனும் கொடுமடா

@@  இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்

@@  ஆயிரம்,ஐநூறுன்னு வேனுக்கு பணம் வாங்குறானுங்க,வேனோட நிலைமையா பாத்தா ரொம்ப கவலைக்கிடம்

@@  ஓட்டும் டிரைவருக்கு லைசன்சு இல்ல

@@  ஒரே ட்ரிப்பில் 60 பேரை ஏத்தி பிஞ்சுக் குழந்தைங்க உசுரெடுக்குறது

@@  இவனுக கெட்ட கேட்டுக்கு டொனேஷனும் எட்டாவது சேர்க்க என்ட்ரன்சு எக்சாமும்  ஒரு கேடு :(

இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்

ஒரு சிறிய இடைவேளை தேவை

வாழ்க்கை புத்தகத்தின் தலைப்பை கூட முழுதாய் படிக்கவில்லை
அதற்குள் பல வருடங்கள் ஓடிவிட்டன
பாலைவன வெற்றிடமாய் இருக்கிறது  மூளை
கற்றது கையளவு கூட இல்லை கடுகளவு தான் 

ஒரு மூன்று மாதமாய் குடியிருந்த பதிவுலகத்திற்கும் எனக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது,எழுத நினைத்ததை எழுத முடியவில்லை,எங்கெங்கோ அலைகிறது மனசு

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இப்படியே இருந்துவிட முடியாது,எதாவது செய்தே தீரணும் 
 
எனக்குள் நிறைய குழப்பங்கள் இருக்கு ??
நான் நானாகவே மாறணும்
நிறைய படிக்கனும்
நிறைய சிந்திக்கனும் சந்திக்கனும்
 
அது வரை பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கிறேன்,இது என் தேடலின் துவக்கம் தான்

மீண்டும் வருவேன்
நானாய்

வெறும்பயலுக்கு பாராட்டு விழா

பதிவுலகில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

ஒன்றல்ல.............................. பத்தல்ல...................................

நூறு கவிதைகள் ஒரே பதிவில்....யாரால் முடியும்

என் நண்பன் வெறும்பயலால் மட்டுமே முடிந்தது

அவனை பாராட்டி பட்டம் வழங்கத்தான் இந்த பதிவே

வெறும்யலை பாராட்டி ஒரு கவித 

நீ வெறும்பயலல்ல
பெறும்பய (கீழுள்ள போட்டோவை பார்க்கவும்)

ஒன்றும் தெரியாதென்று சொன்னாய்
ஒன்னு ரெண்டு முழுசா தெரிஞ்சிருக்கே

சிங்கப்பூர் கண்டெடுத்த சிங்கமே !!!
சினம் கொள்ளாத சிவனே :(

சிரிப்பு போலீசிடம் கூட
சிக்காத சில்வண்டே



இவரு வெறும்பயலாம் :) நம்புங்க 

அண்ணன் தேவா இப்போது வெறும்பயலுக்கு கவிஞர் வெறும்பாதி என்ற பட்டத்தை அளிப்பார் 



ம்ம்ம் போதும் போதும் ஆட்டுக்கு அருள் இன்னும் அருள் வரலையே....
அடிங்கடா

டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட



செல்வா....சௌந்தர்...ஆளாலுக்கு ஒன்னு எடுத்துக்கங்க,ஆடும் ரெடி ...

வெட்டும் போது அடிபட்டுவிட கூடாது நம்ம நண்பனாச்சேன்னு ஹெல்மெட் போட்டு விட்டுறுக்கோம்


மொத வெட்டு நாங்கதான் வெட்டுவோம் (செல்வா/சௌந்தர்/நான்)

அடுத்து உங்க ரவுண்டு தான்....பூந்து வெட்டுங்க
கறி நிறைய தேறும் போல
சிங்கப்பூருக்கே இன்னக்கி செம தீணி தான் வாங்க வெட்டுங்க ஆட்ட :)

Related Posts with Thumbnails