Showing posts with label science facts. Show all posts
Showing posts with label science facts. Show all posts

அறிவியல் வாத்தியார் - 3

மாலை வணக்கம் ஐயா

வணக்கம் வணக்கம்,என்னடா ஒரு வாரமா ஆள காணோம்

என்னோட ஆளு ஊர்லதான்யா இருக்கா,இப்பதானே பாத்தேன்

அது வேறயா ,சரி சரி நடத்து நடத்து

ஏதாவது சந்தேகம் இல்லாம வரமாட்டையே,என்ன ?

இந்த இசைக்கும் - சத்தத்துக்கும் என்ன வித்யாசம்யா ?

அதாவது இசையும்,சத்தம் இரண்டுமே ஒலி தான்

இரண்டுமே அதிர்வ்களால் உருவாவது தான்

இசை சீரான அதிர்வுகளால் உருவாவது

சத்தம் தாறுமாறான அதிர்வுகளால் உருவாவது

அவ்வளவுதான்..

ஹ ஹ ஹச்ச்ச்ச் .......................
ஐயா இந்த தும்மல் ஏன் வருகிறது ?

ம்ம்ம் சொல்றேன்
முதல்ல தும்மும் போது கைக்குட்டையை வைத்து மூடி கொண்டு தும்மு,சரியா

மூக்கில் உள்ள மெல்லிய சவ்வின் நரம்பு நுனிகள் தூண்டல் ஏற்படும் போது தும்முகிறோம், மூச்சை உள்ளே இழுக்கும் போது தூசி அல்லது பூந்தாதுக்கள் உள்ளே செல்வதாலோ,ஒவ்வாமை,மூக்கடைப்பு இருந்தால் கூட வரும்

மூக்கில் இருக்கும் அன்னியப் பொருளை (foreign particles) காற்றின் மூலம் வெளியேற்ற உதவும் ஒரு அனிச்சை செயலே(reflex action ) தும்மல்

போன வாரம் கராத்தே கிட் படத்துக்கு போனோம்,ண்பன் ஒருத்தன் பாப் கார்ன் வாங்கினான் (எனக்கு ஓசி ),அத பொரிக்கும் போது அந்த குதி குதிக்குதே அது ஏன் ?

படம் எப்டி இருந்தது
வூட்ல பொய் நான் ரசித்ததை படிங்க

பாப் கார்ன் செய்ய பயன் படும் சோளம் ஒரு வித கடினத் தன்மை கொண்டதாகும்,நடுவில் சிறிய அளவு பருப்பும் அதைச் சுற்றி கடினமான மாவுப் பொருளும் இருக்கும் மற்றும் 10 முதல் 15 சதவீதம் ஈரப்பசை

கீழே இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாக பலமடங்கு பெரிதாகும் ,அந்த மாவு பொருளை பிளந்து கொண்டு வெளியே வரும்,அதனால் தான் குதிக்கிறது


அறிவியல் வாத்தியார் - 2


வணக்கம்
ஐயா,சௌக்கியமா இருக்கீங்களா !!

ரொம்ப நல்லா இருக்கேண்டா தம்பி,தமிழ் பதிவுலகில் ஏதோ பிரச்சனயாமே

வேணாம் யா,ரவுண்டு கட்டிடுவாங்க,நாம நம்ம வேலைய பாப்போம்

அதுவும் சரி தான் சரி நேத்து ராத்திரி 12 மணிக்கு டவுட்டுன்னு போன் பண்ணினது நீதான

ஆமாம் யா , பல சந்தேகம் இருக்கு

சரி ஒன்னு ஒன்னா கேட்டு தொல

எங்க அம்மா வயித்துல பிறந்த எனக்கும், என் தம்பி ,தங்கச்சிக்கும் இடையே உருவ ஒற்றுமை இருந்தாலும்,குணம் வேறு படுவது ஏன் ஐயா ?

ஒக்காந்து யோசிச்சிருக்க போல

இல்லையா படுத்துக்கிட்டு யோசிச்சேன் (ஹி ஹி ஹி )

சரி கேட்டுக்க

கருவுறுதல் நிகழும் பொது 23 பண்புக்காரணிகள் மட்டுமே சேர வேண்டும்,இது கூடவோ,குறையவோ கூடாது.இதை சரியாக செய்வது மீயாசிஸ் (meiosis) என்ற பிரிவாகும்

ஆணின் முதல் 23 பண்புக்காரணிகளோ அல்லது கடைசி 23 பண்புக்காரணிகளோ சேரலாம்.என்னென்ன குணங்கள் அல்லது எந்த வரிசை என்பதை கண்டுபுடிக்க முடியாது ( ஆனாலும் முடியும் )



சூல்முட்டையில் விந்து விழும் போது எந்தெந்த விதமாக பண்புக்காரணிகள் இனைகிறதோ,அதை பொறுத்து தான் குணங்கள் மாறுபடுகின்றன,ஒவ்வொரு முறை கருவுறும் போதும் இப்படித்தான் வெவ்வேறு குணங்களில் குழந்தைகள் பிறக்கின்றன

சில இரட்டை குழந்தைகள் ஓட்டிப் பிறப்பது ஏன்யா ?

கருவான முட்டை சில சமயங்களில் இரண்டாக பிரிய வாய்ப்பிருக்கிறது ,அது தான் ரெட்டை குழந்தை(twins) ,அப்படி பிரியும் போது சரியாக பிரியாமலிருக்கும் போது ஓட்டிப் பிறக்கும் (conjoined twins ),சரியாக பிரியாத முட்டை தனித்தனி குழந்தையாக வளர்கிறது

இந்த தேன் சிட்டுக் குருவி மட்டும் எப்படி காற்றில் நிலையாக நிற்கிறது ?

தேன் சிட்டுக்கள் பறந்து கொண்டே தேனை குடிக்கும் ஆற்றல் பெற்றவை,சிறகுகளை வேகமாக அடிப்பதன் மூலமே இது சாத்தியமாகிறது.ஒரு நிமிடத்திற்க்கு 55 தடவைகள் அடிக்கிறது என்றால் பாருங்களேன்

இவ்வளவு வேகமான அசைவுகளால் நம் கண்களுக்கு சிறகுகள் தெரியாது,வெறும் சத்தம் மட்டும் தான் கேட்கும்


ஐயா,இன்னக்கி காலையில என்ன சாப்பாடு ?

சப்பாத்தி தான் டா

ம் அதுல ஒரு சந்தேகம்

அடப் பாவி கேளு

சப்பாதியில எப்படி இரண்டு அடுக்குகள் உருவாகிறது ?

மாவு உருண்டைய தட்டையாக்கி சூடான இரும்பு தவாவில் சுடும் போது,அடியில் இருக்கும் பகுதி சீக்கிரம் சூடாகிறது.அதனால் நடுவில் உள்ள ஈரப்பசை ஆவியாகி மேல் நோக்கி அழுத்தம் தருவதாலேயே பலூனை போல் உப்புகிறது.


ஆனால் சரியாக மாவு இடப்படவில்லையெனில்,சில இடங்கள் மெலிதாகவும் இருக்கும்,அப்போது முழுவதும் உப்பாமல்,விட்டு விட்டு உப்பியிருக்கும்

கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க

நம்ம மூக்குல வாசனை உணரும் செல்கள் எவ்வளவு இருக்கு தெரியுமா ?

அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்

வெறும் 50 லட்சம் தான்,ஆனால் நாய்க்கு எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 22 கோடி செல்கள் இருக்கிறதான்,அதனால தான் போலீஸ்ல பயன்படுத்துறாங்க
தெரியுமா

சரி சரி போதும்,இன்னொரு நாள் பார்போம்,ஆனால் நைட் மட்டும் போன் பன்னாதடா

சரி யா பன்னமாட்டேன்,ரொம்ப நன்றி ஐயா !!

நன்றி,வரேன்

Related Posts with Thumbnails