இசை - கணேசகுமாரன் #1

வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் பீத்தோவனின் கதைதான்.
மதுவுடன் இசையும் சேர்ந்து புனைவு ஒரு மாதிரி போதை ஏற்றுகிறது.
கதையை படித்துவிட்டு 'லூட்விக் வான் பீத்தோவனை' பற்றி படித்தபோதுதான் புரிந்தது புனைவு கிட்டத்தட்ட அவர் நிஜ வாழ்க்கையை உரசி நின்று கொண்டிருப்பதை.
சிறுகதை தொகுப்பு : பைத்திய ருசி
கதைசொல்லி : கணேசகுமாரன்

#100DaysOfReading

இப்பலாம் நான் புத்தகம் வாசிக்கிறது ம்ம்ஹ்ம்ம் வாசிக்கிறதே ரொம்ப கம்மியாயிருச்சி. Good reads challenge'ல மாசத்துக்கு ஒன்னுனு கணக்கு வெச்சி ஒன்பது மாசத்துல வெறும் மூணு புத்தகம் தான் படிச்சிருக்கன்.
அதான் இன்னைலேர்ந்து #100DaysOfReading, தினமும் ஒரு சிறுகதையோ இல்ல ரெண்டு மூணு கவிதையோ வாசிச்சே ஆகனும். டாட்.

மீண்டும் ஒரு ப்ரியா


முஸ்கி : இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும்...சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே :)

ரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை...இரவு 10 மணி...என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த இருபது நிமிட பயணத்திற்க்குள் நான்கு வருட கல்லூரி நினைவுகளுக்குள் நீந்தியே வந்துவிட்டேன்....ஆமாங்க என் கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சு...இனி கலாட்டா இல்ல...கூத்து இல்ல...ம்ம்ம் அந்த காதலும் இல்ல..இந்த நாலு வருசத்துல முலுசா சம்பாதிச்சது ஒரு முப்பது முப்பத்தஞ்சி நட்புகளை தான்..ம்ம்ம் எல்லாம் முடிஞ்சிபோச்...

ஊருக்கு போகனும்...அதுக்குத்தான் இப்ப கோயம்பேடு போயிட்ருக்கன்...டஜன் டஜனாக மக்களை உள்ளும்-வெளியும் தள்ளிக் கொண்டிருந்தது பேருந்து நிலையம்...எல்லா கைகளிலும் வாட்டர் பாட்டில் அல்லது அலைபேசி(கள்)...

கிருஷ்ணகிரி..ஓசூர்..பாண்டி...பாண்டி...விழுப்புரம்...கடலூர்...திண்டிவனம் என ஊர்களை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தனர்...நம்ம ஊர் பக்கம் செல்லும் பேருந்துகளை ஒரு வழியாக தேடிப் பிடித்ததில்..நின்று கொண்டிருந்தது ரெண்டே ரெண்டு தான்..சரி போறதுதான் போறோம்...அந்த புது வண்டிலதான் போவோமேன்னு ஏரியாச்சு...ஒன்னும் கூட்டம்லாம் இல்ல...

வழக்கம் போல் பக்கத்து சீட்டில் பெருசு-வழக்கத்திற்க்கு மாறாக முன் சீட்டில் ஃபிகர்...நீல நிற டீ-சர்ட்...அப்பாவோடத்தான் வந்தா..ஆனா அவர் நாலு சீட் முன்னாடி...எடம் இல்ல போல....பரவாயில்ல என் டார்லிங் சமந்தா அளவுக்கு இல்லனாலும் ஏதோ இருந்தா..ச்ச சுமாரா அழகா இருக்கா..அதுவும் சென்னை எப்டியும் பத்து பதினஞ்சி பாய் ஃப்ரெண்ட்சு இருப்பானுங்க என எதை எதையோ முணுமுணுத்தது மனசு..

வேகம் பிடித்தது பேருந்து..என் எண்ணங்களும் தான்...சென்னையை தாண்டியாச்...டிக்கெட்டும் போட்டாச்...அடுத்து என்ன லைட் ஆஃப்

எனக்கு தூக்கம் வரல...இருளில் நகர்ந்து கொண்டிருந்த நிழல்களை பார்த்துக் கொண்டே நகர்ந்தது நேரம்..


மணி 12ஐ தாண்டி ஓடிக் கொண்டிருந்தது..இஞ்சின் சத்தத்திற்கு இடையிடையே உச்ச்..உச்ச்....யாரோ எதற்க்கோ முனகுவது போன்றதொரு சத்தம் என்னை தொந்தரவு செய்தது...பெரியவர் ஒருவர் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார் அவரா இருக்குமோ...இல்ல பின் சைடு பச்ச கொழந்தய வெச்சிருக்குற பெண்ணா ? சரி நாம தூக்கத்தை வர வெப்போம்னு கண்ண மூடிக்கிட்டு கொஞ்ச நேரமிருந்தன்...மீண்டும் மீண்டும் அந்த உச்'...என்னை வெறுப்பேத்தியது

இங்கு யாரோ பக்கத்தில்தான்..சீட்டிலிருந்து சற்று நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்....ஆமாம் அவ தான்...அந்த சத்தம் அவகிட்டேந்துதான்..அந்த முன் சீட் பெண் தான்...

என்னவா இருக்கும்...மூட்டை பூச்சியா இருக்குமா ? இல்ல எதும் ஒடம்பு சரியில்லையா..ச்ச ச்ச பார்த்தா நல்லாத்தான இருக்கா

திரும்ப திரும்ப...உச்' சத்தம்...இப்போது ஒரு பக்கமாக ஒருக்களித்து கொண்டு...ஏதோ என்னிடம் பேச வருவது போலவே சிணுங்கிக் கொண்டிருந்தாள்

ம்ம்ம் நீண்ட நேர யோசனைக்கு பிறகு அலைபேசியை இயக்கி..அதன் வெளிச்சத்தை...அவளின் உச்'சிற்கு பதிலாக்கினேன்...சட்டென திரும்பியவள்..இதற்க்குத்தான் இத்தனை நேரமாய் காத்திருந்தது போல்...அவள் அலைபேசியில் எதையோ தட்டச்சி எனக்கு தெரிவது போல் காட்டினாள்..திரையில் இருந்தது hai

எனக்கொன்றும் புரியவில்லை...இப்படியொரு இரவில்..அப்படியொரு பெண்ணிற்க்கு என்னிடம் பேச என்ன இருக்க போகிறது..

சரி என்னதான் பாத்துடுவோமே...முன் சீட்டில் சாய்ந்து..அவளுக்கு மட்டும் கேட்கும் அளவான குரலில் ஹாய் என்றேன்...

பக்கத்து சீட் பெருசு...குறட்டையில் ரிதமிக் ஆர்கஸ்ட்ராவே நடத்திக் கொண்டிருந்தது...

அவள் காதில் கண்டிப்பாய் விழுந்திருக்கும்..ஆனால் இன்னும் ஒன்னும் ரியாக்ஷன் இல்ல..இப்ப என்னால முடியல

ச்ச இந்த பொண்ணுங்களே இப்டிதான்...ஒருத்தன கெளப்பி விட்டுட்டு போயிடுவாளுக...நாங்க இப்டி பொலம்பனும்

என்னதான் கல்லூரியில் எத்தனையோ பெண்களுடன் பேசிருக்கன்...பழகிருக்கன்..கடல போட்ருக்கன்..ஆனா இந்த நடு ராத்திரில வந்த  hai இந்த பாடு படுத்துகிறது...

அவ என்னதான் பண்றான்னு பார்க்கலாமேன்னு...பேக்க எடுக்குற மாதிரி எந்திருச்சி...பார்த்தா அந்த புள்ள தூங்கிடுச்சி....

ம்ம்ம் அவ எதுக்குதான் என்னதான் என்ட்ட பேச வந்தா...தெரிஞ்சே ஆகனும்...ஏதோ ஒரு தைரியம் எனக்குள்...டேய் 'அவள எழுப்புடா'ன்னுது

ஜன்னல் பக்கம் தான் அவள் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்..ஜன்னல் கேப்பில் லைட்டா கை விட்டு கையில் கிள்ளினால் போதும்...எந்திருச்சிருவா...பாத்துக்கலாம்

வழக்கமாக ஆடும் கைகள் இப்போது தைரியமாகவே இருந்தது...லாவகமாக கைகளை இயக்கி..முன் சீட்டிற்க்கு சென்றேன்

கை கையை தேடியது...ஆனால் தவறிப் போய் அவள் கைகளுக்கு அருகிலிருந்த மார்புகளை லைட்டா தொட்டுவிட்டது

மிரட்சியில் கைகளை வெடுக்கென உருவிக் கொண்டேன்.. நட்டுக் கொண்டன.......'முடிகள்'

அவளும் எழுந்துவிட்டாள்...ச்ச ஏண்டா ஏன்...அவள் என்ன செய்யப் போகிறாள் என்ற பயத்தை விட அந்த தொடுதல் தந்த கிறக்கமே மிக்கிருந்தது

இப்டி ஆயிடுச்சே..அவள் என்ன பண்ணுவான்னு பெஸ்ட் கேஸ்..ஒர்ஸ்ட் கேஸ் எல்லாம் மூளை ஆராய்ந்தது

1) சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பி..அவ அப்பா என் கழுத்தை பிடித்து பஸ்லேர்ந்து எறக்கி விடுவது
2) எதையும் வெளியே சொல்லாம..எங்கிட்ட மீண்டும் பேசாமல் அப்டியே செல்வது

அவள் என்ன செய்ய போகிறாள் என்ற ஆவல்.அதாங்க பயம் தாங்கமுடியல

கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு..அவள் அலைபேசியை எடுத்து..மீண்டும் எதோ ஒத்தினாள்

dai ennada loosu? :)

லூசா...இப்படி சம்பத்தமில்லாத  கேள்வி(பதில்) என்னை ஆச்சரியப்படுத்தியது

சரி இது வேற யாருக்காவது இருக்கும்..வெயிட் பண்ணுவோம்னு காத்திருந்தேன்..இல்ல யாருக்கும் அனுப்பல...அது எனக்குத்தான்

இப்போது அந்த சேதியை அழித்துவிட்டு..8056533228 என்ற நம்பரை டைப்பினாள்...

என்னடா இது...கத வேற மாதிரி போகுது...என்ன பொண்ணுடா இவ

என் கை தவறாவே பட்டிருந்தாலும்...ஒரு பொண்னு இப்டியா நடந்துக்குவா..பசங்கள முன்ன பின்ன பாத்திருக்கவே மாட்டாளோ

எப்டியோ நாம தப்பிச்சா சரி...அவ நெம்பரை போனில் சேமித்துக் கொண்டு

extremly sorry pa என்று மெசேஜை தட்டினேன்

k da...no worries என ரொம்ப ரிலாக்சாவே பதில் வந்தது

பிறகு ஊரென்னா...அப்பா என்ன பண்றாரு...அண்ணன் தம்பி இருக்கானுங்களா..ஒரே கடல கடலதான்..

அவ பேர உங்ககிட்ட சொல்டனா என்ன..இல்லல்ல...இவ பேரும் ப்ரியாவாம் :)

இந்த கிளுகிளுப்புளயே ஊர் வந்து சேந்தாச்சு...குட்டி தூக்கம் போட்டு எந்திருச்ச்ப்போ

3 message received

அவகிட்டேர்ந்துதான்...

dai rcharge me fr 50 rs da urgent

ஆஹா சனியன் சட பிண்ண ஆரம்பிச்சிடுச்சே..பொட்டு வெச்சு பூ  வெக்காம போவாதே ரைட்டு...priya3னு சேமித்திருந்ததை LOLனு மாத்திட்டன்

LOLனா என்னன்னு கேக்குறீங்களா...தெரியல..அதாங்க...லோலாயி :)








கோக்குமாக்கு - 29/08/11

ஹாய் மக்கள்ஸ் 


இளம் பதிவர்கள் சந்திப்பு

நம்ம ஜில்தண்ணி கடைய ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ரெண்டு வருசம் இருக்கும்னு நெனைக்குறன்...மொக்க போஸ்ட் போட்டாலும் அதுக்கும் கமெண்டுகளை வாரி வழங்கி என்னை வாழ வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி (அப்பாடா எப்டியோ பிட்ட போட்டாச்சி :))

இந்த பதிவால நிறைய நண்பர்கள் கிடைச்சாயிங்க...நிறைய பேருகிட்ட ஆன்லைன்,மொபைல்'லதான் பேசிகிட்டு இருக்கன்...எல்லாரையும் நேரடியா சந்திக்கனும்னு ஆசை...அது கூடிய சீக்கிரம் கொஞ்சமாவுது நிறைவேற போவுதுன்னு நெனைக்குறன் 

சென்னை யூத் பதிவர் சந்திப்பாம்ல...என்னதான் நடக்குதுன்னு பாத்துடுவோமே :)

________________________________________________________________________________

 தமனை கேளுங்கள்

யப்பா...சான்சே இல்ல,வர வர தமன் போடுற லவ் சாங்ஸ்லாம் செம்ம பீட்டுதான் போங்க....வந்தான் வென்றான் பாடல்களை ஒரு முறை கேட்டுதான் பாருங்களேன் தெரியும் :)

________________________________________________________________________________

I quit facebooking...

ஹீ ஹீ ரொம்ப அடிக்ட் ஆயிட்டன்..சோ வேற வழியே இல்ல...அதான் De-activate செஞ்சிட்டன் ...இனி ஒன்லி ப்ளாகர் மட்டும் தான் :)

_________________________________________________________________________________

ஆவின் பால்

டெய்லி கரெக்டா பல்லு வெளக்குரனோ இல்லியோ...ஆவின் பால் குடிக்க மறக்குறதே இல்ல...மாலை 5 மணி ஆயிட்டுனா...வாய் நம நமங்குது....கிண்டி வந்து ஆவின் பால் குடிச்சிட்டுதான் வீட்டுக்கு போறதெல்லாம் :)

_________________________________________________________________________________

டிஸ்கி :  ரொம்ப நாள் எழுதாததால ஃப்ளோ இல்ல...அதான் இத்தோட முடிச்சிக்கிறன்.......) :)

3


முஸ்கி :  யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல :)

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). அழகான பெண்கள்
ஆ). பேசிக் கொண்டே இருப்பது (ஆண் நண்பர்களிடமும் தான் :) )
இ).  இசை

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). என்னை விரும்பாத அழகான பெண்கள்
ஆ). தனிமை
இ).  வெட்டி பந்தா

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). வேகமாய் பயணிப்பது  
ஆ)  என் எதிர்காலம் ? 
இ).  என் க்ளோசப் போட்டோ 

4.புரியாத 3 விசயங்கள் :

அ).  கணக்கு
ஆ). பெண்கள்(இதுக்கும் கணக்குக்கும் சம்பந்தமில்ல :))
இ).  செல்வா கதைகள்

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ).  நான்
ஆ). படிக்கிறன்னு காட்டிக்க பத்து பதினைந்து புத்தகங்கள்( ஆ.வி,குமுதம்,குங்குமம் இல்ல)
இ).  லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள் 

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). நானும் பதிவெழுதுவது
ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள்
இ).  அவ்ளோதான் . 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ).  யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன் 
ஆ). மொக்கை போடுவது
இ).  ஜில்தண்ணி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சன் ஆனா.......

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :) 
ஆ).ஒரு சிறுகதையாவது முழுசா எழுதனும் 
இ).  ட்ரம்சு கத்துக்கனும் 

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). இன்னும் ஓர் இரவு ( கற்றது தமிழ்)
ஆ).நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை( வாரணம் ஆயிரம்)
இ). பேசுகிறேன்...பேசுகிறேன்

14.பிடித்த 3 படங்கள் :

அ). கற்றது தமிழ்
ஆ) தளபதி
இ). வாரணம் ஆயிரம்

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). இணையம்
ஆ). என் டப்பா அலைபேசி
இ).  வெட்டி பேச்சு



டிஸ்கி
: யாருக்காவத் பதிவு போட ஒன்னுமில்லனா இத தொடர் பதிவா போடுங்க...முடிஞ்சா அதுல மேதகு ஜில்தண்னியார் அவர்களுக்கு நன்றின்னு போட்டால் வீட்டுக்கு எதாவ்து கிஃப்ட் வாங்கி அனுப்புறன் 

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

ஆ........

அப்போது மணி  இரவு  எட்டை தாண்டியிருக்கும் ப்ரித்வி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தான், முறுவலா ஒரு தோசை என்று சித்தியிடம் ஆர்டர் செய்துவிட்டு எண்ணெய் ஜாடியை எடுக்க விழைகையில் ஒரு சத்தம்

டொக் டொக் !!
ஹாய் மச்சான்  !!

நண்பன் மணி அரட்டை பெட்டியில் கூப்பிடுரான் ஹாய் மச்சி தோ வாரேன்னு இவன் உரத்த குரலில் தன்னை அறியாமல் கத்திவிட, சித்தி டேய் என்னடா யாருகிட்ட பேசுற இங்க யாருமே இல்லயே, எதாவது போன் கீன் வந்துச்சாடா

சீ ஒன்னுமில்ல என்று தலையில் தட்டிக் கொண்டு தோசை போன்றே முறுவலான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்தான்.

மாடிப் படிகளில் சட்டென தாவி மேல சென்ற போது கடிகாரம் சரியாக 9.30 ஐ காட்டிக் கொண்டிருந்தது, சரி எதாவது படிக்கலாமேன்னு அலமாரியில் கலைந்து கிடந்து புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாலு பக்கம் மேய்ந்து கொண்டிருக்கையில் 

இன்னும் ஓர் இரவு ! இன்னும் ஓர் நிலவு  
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா ! 
என் நெஞ்சிலொரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் !! 
இரும்பிலே இருதயம் முளைக்குதே !

என்று கன்னாபின்னாவென்று பாடல்கள் மாறி மாறி  இவன் காதுமடலருகில் காட்டுக் கத்தலில் ஒலித்துக் கொண்டிருந்தது, மண்டையே வெடித்துவிடும் போன்ற உணர்வு  மூளை நரம்புகள்  முறுக்கிக் கொள்வைதை போல ஒரு வலி, சட்டென தன் காதில் இருந்த ஹெட்போன பிய்தெடுக்க முயற்ச்சிக்கையில் காதில் ஹெட்போனே இல்லை, பின் எப்படி இந்த சத்தம் 

அலைபேசியை சுண்டிப் பார்க்கையில் அதிலும் பாடவில்லை, அந்த சத்தத்தின் படபடப்பு அடங்கவில்லை, ஜன்னலில் எட்டிப் பார்த்தான்...மொட்டை மாடியில் ஏறி தெருவை வெறித்து பார்த்தான்...குளிரில் குட்டி நாய் ஒன்று அலரிக் கொண்டிருந்த சத்தம் மட்டும் தான்..அப்படி ஒரு அமைதி...


பதட்டத்தில் பத்து படிகள் மதமதவென குதித்திறங்கி ஆக்வாசியூரில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மூன்று தம்ளர்கள் குடித்திருப்பான்..அப்போது சித்தப்பா காலை சாப்பாட்டுக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார் ..அவரிடம் இதை சொல்லலாமா என்று ஒரு நொடி  யோசிக்கையில் அனிச்சையாக கால்கள் படிகளில் செலுத்தப்பட்டு மீண்டும் மாடிக்கே வந்தான் 

இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை...இதை டைரியில் எழுதிவிடுவொம், என்னன்னு அப்பரம் ஓசிக்கலாம்னு..தன் மெத்தைக்கடியிலிருந்த டைரியை எடுத்து பிப்ரவரி 16-ஐ தேடி  இந்த உணர்வை எப்படி எழுதுவது என்று மனசுல ஒருவாரு எழுத்துக்களை கோர்த்து கொண்டு 
எழுத பேனாவை டைரியில் கைவைக்க அங்கொரு அதிர்ச்சி 

தான் மனதில் கோர்த்த எழுத்துக்கள் டைரியில் அச்சுபிசகாமல் அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் டைரியை வீசிவிட்டான்...இரவின் தனிமையில் பயம்  என்னவென்றே புரியாமல் மொசேக் தரையில் சப்பணக்கால் போட்டுக் உட்கார்ந்து தலையை சொரிந்து கொண்டே இருந்தான் 

தலை முடியெல்லாம் உதிர்ந்து தலைபாரமே இல்லாமல் போன்றிருந்தது  ....தன்னையறியாமல் கண்கள் சொக்கிப் போய் தரையிலேயே தூங்கிப் போய்விட்டான் ப்ரித்வி...

காலை பத்து பதினோரு மணியிருக்கும் மீண்டும் அந்த சத்தம் 
 
டொக் ! டொக்
 
இப்போது கணிப்பொறிக்குள்ளிருந்து வந்தது..மேசையிலிருந்த சுட்டியை திரையில் நகர்த்தி க்ளிக்கி இவனும் ஹாய் மச்சான் என்று அரட்டையடிக்க ஆரம்பித்தான்

டிஸ்கி :   என்ன பண்றது இந்த சுஜாத புத்தகங்கள படிக்கிறதும் , கம்பிபிட்டர  நோண்டுறதுமே பொலப்பா இருந்தா இப்பிடித்தான் எதாவது சம்மந்தமில்லாம  தோணுமாம் 




Related Posts with Thumbnails