கோக்குமாக்கு - 29/08/11

ஹாய் மக்கள்ஸ் 


இளம் பதிவர்கள் சந்திப்பு

நம்ம ஜில்தண்ணி கடைய ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ரெண்டு வருசம் இருக்கும்னு நெனைக்குறன்...மொக்க போஸ்ட் போட்டாலும் அதுக்கும் கமெண்டுகளை வாரி வழங்கி என்னை வாழ வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி (அப்பாடா எப்டியோ பிட்ட போட்டாச்சி :))

இந்த பதிவால நிறைய நண்பர்கள் கிடைச்சாயிங்க...நிறைய பேருகிட்ட ஆன்லைன்,மொபைல்'லதான் பேசிகிட்டு இருக்கன்...எல்லாரையும் நேரடியா சந்திக்கனும்னு ஆசை...அது கூடிய சீக்கிரம் கொஞ்சமாவுது நிறைவேற போவுதுன்னு நெனைக்குறன் 

சென்னை யூத் பதிவர் சந்திப்பாம்ல...என்னதான் நடக்குதுன்னு பாத்துடுவோமே :)

________________________________________________________________________________

 தமனை கேளுங்கள்

யப்பா...சான்சே இல்ல,வர வர தமன் போடுற லவ் சாங்ஸ்லாம் செம்ம பீட்டுதான் போங்க....வந்தான் வென்றான் பாடல்களை ஒரு முறை கேட்டுதான் பாருங்களேன் தெரியும் :)

________________________________________________________________________________

I quit facebooking...

ஹீ ஹீ ரொம்ப அடிக்ட் ஆயிட்டன்..சோ வேற வழியே இல்ல...அதான் De-activate செஞ்சிட்டன் ...இனி ஒன்லி ப்ளாகர் மட்டும் தான் :)

_________________________________________________________________________________

ஆவின் பால்

டெய்லி கரெக்டா பல்லு வெளக்குரனோ இல்லியோ...ஆவின் பால் குடிக்க மறக்குறதே இல்ல...மாலை 5 மணி ஆயிட்டுனா...வாய் நம நமங்குது....கிண்டி வந்து ஆவின் பால் குடிச்சிட்டுதான் வீட்டுக்கு போறதெல்லாம் :)

_________________________________________________________________________________

டிஸ்கி :  ரொம்ப நாள் எழுதாததால ஃப்ளோ இல்ல...அதான் இத்தோட முடிச்சிக்கிறன்.......) :)

3


முஸ்கி :  யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல :)

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). அழகான பெண்கள்
ஆ). பேசிக் கொண்டே இருப்பது (ஆண் நண்பர்களிடமும் தான் :) )
இ).  இசை

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). என்னை விரும்பாத அழகான பெண்கள்
ஆ). தனிமை
இ).  வெட்டி பந்தா

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). வேகமாய் பயணிப்பது  
ஆ)  என் எதிர்காலம் ? 
இ).  என் க்ளோசப் போட்டோ 

4.புரியாத 3 விசயங்கள் :

அ).  கணக்கு
ஆ). பெண்கள்(இதுக்கும் கணக்குக்கும் சம்பந்தமில்ல :))
இ).  செல்வா கதைகள்

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ).  நான்
ஆ). படிக்கிறன்னு காட்டிக்க பத்து பதினைந்து புத்தகங்கள்( ஆ.வி,குமுதம்,குங்குமம் இல்ல)
இ).  லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள் 

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). நானும் பதிவெழுதுவது
ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள்
இ).  அவ்ளோதான் . 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ).  யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன் 
ஆ). மொக்கை போடுவது
இ).  ஜில்தண்ணி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சன் ஆனா.......

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :) 
ஆ).ஒரு சிறுகதையாவது முழுசா எழுதனும் 
இ).  ட்ரம்சு கத்துக்கனும் 

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). இன்னும் ஓர் இரவு ( கற்றது தமிழ்)
ஆ).நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை( வாரணம் ஆயிரம்)
இ). பேசுகிறேன்...பேசுகிறேன்

14.பிடித்த 3 படங்கள் :

அ). கற்றது தமிழ்
ஆ) தளபதி
இ). வாரணம் ஆயிரம்

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). இணையம்
ஆ). என் டப்பா அலைபேசி
இ).  வெட்டி பேச்சு



டிஸ்கி
: யாருக்காவத் பதிவு போட ஒன்னுமில்லனா இத தொடர் பதிவா போடுங்க...முடிஞ்சா அதுல மேதகு ஜில்தண்னியார் அவர்களுக்கு நன்றின்னு போட்டால் வீட்டுக்கு எதாவ்து கிஃப்ட் வாங்கி அனுப்புறன் 

Related Posts with Thumbnails