Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

பதிவுலகில் ஜொள்ளும் ஜில்லும்

ஊரே நான் எப்படிப்பட்டவன் !!!  நான் எப்படிப்பட்டவன்னு கேள்வி கேட்டுகிட்டு அலையுது, இப்ப என்னையும் கேக்க வச்சிட்டாரு நம்ம நண்பன் வெறும்பய
சரி அதையும் பாத்துடலாம் வாங்க

முதலில் இந்த தொடர் பதிவை என்னை எழுத அழைத்த வெறும்பயலுக்கு கட்டிச் சட்னியுடன் செட் தோசை பார்சல்

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

முதலில் வெறும் ஜில்தண்ணி என்று தான் வைத்திருந்தேன்,அப்பரம் என்னுமோ தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா மாதிரி நானே என் பெயருடன் ஜில்தண்ணி - யோகேஷ் என்று போட்டுக் கொண்டேன்

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
 
என் உண்மையான முழு பெயர் யோகேஷ்வரன் 


ஜில்தண்ணினு வைக்க காரணம் சுடுதண்ணி அவர்களின் பதிவுகளின் மேல் உள்ள ஈர்ப்பு தான் காரணம்,பதிவுலகில் நிறைய பேர் என்னை  ஜில்லு என்றுதான் கூப்பிடுவார்கள்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

இந்த பதிவுகள் அப்டின்னு ஒன்னு இருக்குறதே சுடுதண்ணி அவர்களின் பதிவை படித்த பின்பு தான் தெரியவந்தது,அவர் பதிவுகளில் வரும் பின்னூட்டத்தில் மூலம் நிறைய நண்பரக்ளின் பதிவை படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத 


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாமே செய்திருக்கிறேன்


பின்னூட்டத்தில்,chat ல்,ஆர்குட்டில்,ட்விட்டரில் இப்படி எல்லாவற்றிலும் என்னை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்  பதிவுகளை போட்டிருக்கிறேன்

நான் நாலு பேர படிக்க ஆரம்பித்தேன் என்னை நாலு பேர் படிக்க ஆரம்பித்தார்கள்,அப்படியே நட்பு வட்டம் விரிந்தது


வலைச்சரத்திற்கும் இதில் பங்கிருக்கிறது
சை.கொ.ப,சேட்டைகாரன்,கே.ஆர்.பி அண்ணே,நீச்சல்காரன்,புலவன் புலிகேசி ஆகியோரால நானும் என் பதிவும் அறிமுகப்படுத்தப்பட்டோம்,அதன் மூலமும் நண்பர்கள் என் பதிவிற்கு வந்தார்கள்  

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது  இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன்,இனியும் பகிர்வேன்
விளைவு என்னை  என் மனநிலையை மற்றவர்கள் ஓரளவுக்கு இதனால் புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ம்ம்ம் முழு நேர பொழுதுபோக்காகத்தான்  ஆரம்பித்தது எனக்கு நிறைய சம்பாதித்து கொடுத்தது நண்பர்களை தான் 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு பதிவுகளும்  தமிழில் தான் இருக்கிறது
ஒன்று இந்த ஜில்தண்ணி

இன்னொன்று நண்பன் குத்தாலத்தானுடன் இனைந்து குத்தாலத்தான்ஸ்  என்ற பதிவும் தொடங்கியிருக்கிறோம்



8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் வந்ததில்லை,நிறைய பதிவர்களை பார்த்து டன் கணக்கில் பொறமை பட்டிருக்கிறேன்

அவர்களில் வால் பையன், பனித்துளி சங்கர் அண்ணே,சகோதரர்  தேவா , அண்ணன் பட்டறை ஷங்கர்,ஹாலிவுட் பாலாண்ணே ,சைவ கொத்து பரோட்டா, வெறும்பய,பிரசன்னா இப்டி இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு ,இவர்களை படித்து படித்து பொறாமை படாத நாட்களே இல்லை

ஏன் பொறாமை என்றால், எப்டித்தான் இப்டி எழுதுறாங்க,அவங்களுக்கும் மனித மூளை தானே இருக்கும்,பின்ன எப்படி என்று யோசித்து யோசித்து பொறாமை பட்டிருக்கிறேன் 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பதிவிலேயே பின்னூட்டமிட்டு பாராட்டியவர் அண்ணன் LK அவர்களும் சகோ ஆனந்தியும.
அதன் பிறகு நிறைய பாரட்டுக்கள்  மீண்டும் மீண்டும் எழுத எனக்கு உத்வேகமாக இருந்தது

என் அலைபேசி எண்ணை விடாப்படியாக  வாங்கி  என்னிடம் பேசி பாராட்டியும் என்னை மெருகூட்ட ஐடியாக்களையும் தந்தவர் பனித்துளி சங்கர் அண்ணன் அவர்கள்

அப்பறம் chatting-ல சகோதரர் தேவாவும்,சிரிப்பு போலீசு ரமேஷ் அண்ணனும் வந்து பாராட்டியது எனக்கு மிகப் பெரும் உத்வேகமளித்தது எதாவது உருப்படியாக எழுத

இப்போதும்   ரசிகன்-மகேஷ்,பிரசன்னா,வெறும்பய,கோமாளி  போன்ற நட்புகளின் அன்பால்  நான் இங்கு இருக்கிறேன் ,இருக்க முடிந்தது

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

கண்டிப்பா என்ன பத்தி இன்னும் நிறைய  சொல்ல வேண்டியிருக்கு 

முடிவா சொல்லிக்கிறேன் பதிவுலகில் நான்  ஒரு

லொள்ளு - ஜொல்லு - தில்லு - ஜில்லு 

இன்னும் நிறைய பேரை சொறிந்துவிட வேண்டும், இதை தொடர அழைப்பவர்கள்

மகேஷ் - ரசிகன்
கொத்துபரோட்டா  பிரசன்னா
இந்திராவின் கிறுக்கல்கள்
நான் வாழும் உலகம் - ரியாஸ்

எழுதுங்க !!!! தெரிஞ்சிக்கிறோம்

மன்னாதி மன்னன் - ஹர்சவர்த்தனர்

வரலாற்றை படிப்பதனால் அப்படி என்ன தெரிந்து விடப் போகிறது,எல்லாம் முடிந்து போன விஷயம் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,இந்த பதிவை எழுத நிறைய மன்னர்களை பற்றி புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்,அதில் இந்த மன்னனை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை,அந்த காலத்தில் இருந்த சமயங்கள்,பண்பாடுகள் பற்றி அறிய இந்த பதிவு எனக்கு உதவியது

இந்த அருமையான பதிவை என்னை எழுத வைத்த,தொடர் பதிவிற்கு அழைத்த நண்பன் ரசிகன்:மகேஷ் க்கு நன்றிகள் பல


ரசிகன் : மகேஷ் அவர்களின் மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர் பதிவு
_____________________________________________________________________________

கி.பி ஏழாம் நூற்றாண்டில் அரசியல் மேடை ஏறியவரும் கடைகி மிகப்பெரும் புத்த மத மன்னருமான ஹர்சவர்த்தனர் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னராவார்.

முடிசூட்டல்

கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரவர்த்தனர் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது, அவரை தொடர்ந்து ஆதித்யவர்த்தனரும்,பிரபாகவர்த்தனரும் ஆட்சி செய்தனர்,பிரபாகவர்த்தனரின் மறைவுக்கு பின்னர் இராஜ்ய வர்த்தனர் அரியனை ஏறினார்

ஹீனர்களை (ஊனர்கள்) அடக்கி தானேசுவரத்தை கைபற்றினார்,அதே சமயம் மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரி ராஜ்ஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயையும் தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்

அதை அறிந்த ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான்,ஆனால் அதன் பின் சில சூழ்ச்சியால் சசாங்க மன்னனால் கொல்லப்பட்டான்

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்,ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிவாங்கி தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டான்


ஆட்சி முறை

அதுவரை தானேசுவரத்தை தலைநகராக கொண்டு தான் அனைவரும் ஆட்சி செய்து வந்தனர்,ஆனால் ஹர்சர் கன்னோசியையும் அதனுடன் இனைத்து மாபெறும் சாம்ராச்சியத்தை உருவாக்களானான்.


மிகப்பெரிய பேரரசு பரந்து விரிந்திருந்ததனால்,ஆட்சி செய்ய கடினமாய் இருந்தது,அதனால் சிற்றரசர்களை அச்சுருத்தவும்,உள்நாட்டுக் குழப்பங்களை தீர்க்கவும் ஒரு மிகப் பெரிய படையை 60,000 யானைகளையும், 1,00,000 குதிரைகளையும் வாங்கி உருவாக்கலானான் என்று குறிப்புகளில் உள்ளது

படைபலம் மட்டுமன்றி  நட்பையும் பெருக்கலானார்,அசாம் நாட்டு மன்னன் பாஸ்கர வர்மனிடம் தீவிர நட்பு பாராட்டலானார்.

அது மட்டுமன்றி அண்டை தேசங்களுடன் நட்பு பாராட்டி வானிபத்தை பெருக்க முயன்றார்,அதற்கு சீன தேசத்திற்கு தன் தூதுவரை அனுப்பி நட்பு பாராட்டினார் ஹர்சர்

மாநிலங்கள் புக்திகள் என்று அழைக்கப்பட்டன,புக்திகள் விஷயம் அல்லது மாவட்டங்களாக பிரித்து நிர்வாகம் செய்தான்

ஹர்சரின் சமயம்

தொடக்கத்தில் தீவிர சிவபக்தராக இருந்தவர் ஹர்சர் என்றும்,யுவான் சுவாங் தெரிவித்த புத்த மத கொள்கைகளாலும்,சகோதரி ராஜ்யஸ்ரீ யாலும் இவர் புத்த மதத்தை தழுவலானார்

புத்த சமயத்தை இவர் தழுவினாரே அன்றி ஏனைய சமய மக்களையும் கனிவோடு கவனித்தார்,கட்டாய மதமாற்றம் போன்றவைகளை வெறுத்தார்

தலைநகர் கன்னோசி

வடஇந்தியாவின் முக்கிய நகரமாகி புத்தர் காலத்து பாடலிபுத்திரத்தின் இடத்தை பிடித்தது ஹர்சரின் தலைநகர் கன்னோசி, 10,000 க்கும்  மேற்பட்ட இரு புத்த சமய துறவிகள் இங்கு வாழ்ந்து வந்தனர்

பிற மத கோவில்களும் இருநூற்றுக்கும் மேல் இருந்ததாகவும் தெரிகிறது, நன்கு  திட்டமிடப்பட்ட வீதிகளும்,பூங்காக்களும்,புத்த மடங்களும் கன்னோசியை அலங்கரித்தது

யுவான் சுவாங்கும் நாலந்தா பல்கலைகழகமும்

ஹர்சர் சீனாவடன்   நெருங்கிய நட்பு பூண்டமையால்,சீன நாட்டு யுவான் சுவாங்கை வரவேற்று உபசரித்தார்,யுவானுக்கு ஹர்சரின் ஆட்சி முறையும் போர் திறமையும் மிகவும் பிடித்து விட்டது



ஹர்சரின் காலத்தில் மிகப்பெரும் தொகை மானியமாக நாலந்தா பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்தது

பல்கலையின் உயர்ந்த கட்டிடங்கள்,போதனா முறைகள் ஆகியன புத்த சமயத்திற்கே உரித்தான புகழாகும்

ஹர்சர் காலத்து இலக்கியம்

ஹர்ச சரிதத்தையும் காதம்பரி போன்ற அற்புத நூல்களை படைத்த பாணபட்டர் ஹர்சரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இவரின் இலக்கிய ஆர்வம் இதிலிருந்தே தெரிகிறது

மேலும் ஹர்சரே ஒரு சிறந்த நாடகாசிறியர் ஆவார்,நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகியன இவரே எழுதிய நாடகங்கள்

மறைவும் பேரரசின் சிதைவும்

நாற்பாதாண்டு காலம் மிகப் பெரிய சாம்ராச்சியத்தை நடத்திய ஹர்சவர்த்தனர் கி.பி 647 வாக்கில் மறைந்தார் என தெரிகிறது

ஹார்சரின் மறைவுக்கு பிறகு அவருக்கு கீழிருந்த சிற்றரசர்கள் தங்கள் எல்லைகளை பெருக்கி கொண்டனர்,அசாம் மன்னன் பாஸ்கர வர்மனும் நகரங்களை பிடித்துக் கொண்டான்,இதனால் மிகப்பெரிய சாம்ராச்சியம் முடிவுக்கு வந்தது

குறிப்புகள் :

ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும்,யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை

விக்கிபீடியா கலைக்கலஞ்சியத்தில் இவரை பற்றி ஆங்கிலத்தில் அதிக தகவல்கள் உள்ளன,தமிழில் மிகக் குறைவே

தொடர் பதிவு :
 
விக்கிபீடியாவில் இவர் போன்ற மன்னர்களை பற்றிய தகவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளது,விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க!

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.
 
இதை தொடர அழைக்கிறேன்

இவர்கள் மட்டுமல்ல ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம் !!! மன்னாதி மன்னனை



Related Posts with Thumbnails