Showing posts with label 100DaysOfReading. Show all posts
Showing posts with label 100DaysOfReading. Show all posts

இசை - கணேசகுமாரன் #1

வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் பீத்தோவனின் கதைதான்.
மதுவுடன் இசையும் சேர்ந்து புனைவு ஒரு மாதிரி போதை ஏற்றுகிறது.
கதையை படித்துவிட்டு 'லூட்விக் வான் பீத்தோவனை' பற்றி படித்தபோதுதான் புரிந்தது புனைவு கிட்டத்தட்ட அவர் நிஜ வாழ்க்கையை உரசி நின்று கொண்டிருப்பதை.
சிறுகதை தொகுப்பு : பைத்திய ருசி
கதைசொல்லி : கணேசகுமாரன்

#100DaysOfReading

இப்பலாம் நான் புத்தகம் வாசிக்கிறது ம்ம்ஹ்ம்ம் வாசிக்கிறதே ரொம்ப கம்மியாயிருச்சி. Good reads challenge'ல மாசத்துக்கு ஒன்னுனு கணக்கு வெச்சி ஒன்பது மாசத்துல வெறும் மூணு புத்தகம் தான் படிச்சிருக்கன்.
அதான் இன்னைலேர்ந்து #100DaysOfReading, தினமும் ஒரு சிறுகதையோ இல்ல ரெண்டு மூணு கவிதையோ வாசிச்சே ஆகனும். டாட்.

Related Posts with Thumbnails