பதிவுலகில் ஜொள்ளும் ஜில்லும்
ஊரே நான் எப்படிப்பட்டவன் !!! நான் எப்படிப்பட்டவன்னு கேள்வி கேட்டுகிட்டு அலையுது, இப்ப என்னையும் கேக்க வச்சிட்டாரு நம்ம நண்பன் வெறும்பய
சரி அதையும் பாத்துடலாம் வாங்க
முதலில் இந்த தொடர் பதிவை என்னை எழுத அழைத்த வெறும்பயலுக்கு கட்டிச் சட்னியுடன் செட் தோசை பார்சல்
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
முதலில் வெறும் ஜில்தண்ணி என்று தான் வைத்திருந்தேன்,அப்பரம் என்னுமோ தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா மாதிரி நானே என் பெயருடன் ஜில்தண்ணி - யோகேஷ் என்று போட்டுக் கொண்டேன்
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என் உண்மையான முழு பெயர் யோகேஷ்வரன்
ஜில்தண்ணினு வைக்க காரணம் சுடுதண்ணி அவர்களின் பதிவுகளின் மேல் உள்ள ஈர்ப்பு தான் காரணம்,பதிவுலகில் நிறைய பேர் என்னை ஜில்லு என்றுதான் கூப்பிடுவார்கள்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
இந்த பதிவுகள் அப்டின்னு ஒன்னு இருக்குறதே சுடுதண்ணி அவர்களின் பதிவை படித்த பின்பு தான் தெரியவந்தது,அவர் பதிவுகளில் வரும் பின்னூட்டத்தில் மூலம் நிறைய நண்பரக்ளின் பதிவை படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எல்லாமே செய்திருக்கிறேன்
பின்னூட்டத்தில்,chat ல்,ஆர்குட்டில்,ட்விட்டரில் இப்படி எல்லாவற்றிலும் என்னை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் பதிவுகளை போட்டிருக்கிறேன்
நான் நாலு பேர படிக்க ஆரம்பித்தேன் என்னை நாலு பேர் படிக்க ஆரம்பித்தார்கள்,அப்படியே நட்பு வட்டம் விரிந்தது
வலைச்சரத்திற்கும் இதில் பங்கிருக்கிறது
சை.கொ.ப,சேட்டைகாரன்,கே.ஆர்.பி அண்ணே,நீச்சல்காரன்,புலவன் புலிகேசி ஆகியோரால நானும் என் பதிவும் அறிமுகப்படுத்தப்பட்டோம்,அதன் மூலமும் நண்பர்கள் என் பதிவிற்கு வந்தார்கள்
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
அவ்வப்போது இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன்,இனியும் பகிர்வேன்
விளைவு என்னை என் மனநிலையை மற்றவர்கள் ஓரளவுக்கு இதனால் புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ம்ம்ம் முழு நேர பொழுதுபோக்காகத்தான் ஆரம்பித்தது எனக்கு நிறைய சம்பாதித்து கொடுத்தது நண்பர்களை தான்
இரண்டு பதிவுகளும் தமிழில் தான் இருக்கிறது
ஒன்று இந்த ஜில்தண்ணி
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
யார் மீதும் கோபம் வந்ததில்லை,நிறைய பதிவர்களை பார்த்து டன் கணக்கில் பொறமை பட்டிருக்கிறேன்
அவர்களில் வால் பையன், பனித்துளி சங்கர் அண்ணே,சகோதரர் தேவா , அண்ணன் பட்டறை ஷங்கர்,ஹாலிவுட் பாலாண்ணே ,சைவ கொத்து பரோட்டா, வெறும்பய,பிரசன்னா இப்டி இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு ,இவர்களை படித்து படித்து பொறாமை படாத நாட்களே இல்லை
ஏன் பொறாமை என்றால், எப்டித்தான் இப்டி எழுதுறாங்க,அவங்களுக்கும் மனித மூளை தானே இருக்கும்,பின்ன எப்படி என்று யோசித்து யோசித்து பொறாமை பட்டிருக்கிறேன்
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் பதிவிலேயே பின்னூட்டமிட்டு பாராட்டியவர் அண்ணன் LK அவர்களும் சகோ ஆனந்தியும.
அதன் பிறகு நிறைய பாரட்டுக்கள் மீண்டும் மீண்டும் எழுத எனக்கு உத்வேகமாக இருந்தது
என் அலைபேசி எண்ணை விடாப்படியாக வாங்கி என்னிடம் பேசி பாராட்டியும் என்னை மெருகூட்ட ஐடியாக்களையும் தந்தவர் பனித்துளி சங்கர் அண்ணன் அவர்கள்
அப்பறம் chatting-ல சகோதரர் தேவாவும்,சிரிப்பு போலீசு ரமேஷ் அண்ணனும் வந்து பாராட்டியது எனக்கு மிகப் பெரும் உத்வேகமளித்தது எதாவது உருப்படியாக எழுத
இப்போதும் ரசிகன்-மகேஷ்,பிரசன்னா,வெறும்பய,கோமாளி போன்ற நட்புகளின் அன்பால் நான் இங்கு இருக்கிறேன் ,இருக்க முடிந்தது
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
கண்டிப்பா என்ன பத்தி இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருக்கு
முடிவா சொல்லிக்கிறேன் பதிவுலகில் நான் ஒரு
லொள்ளு - ஜொல்லு - தில்லு - ஜில்லு
இன்னும் நிறைய பேரை சொறிந்துவிட வேண்டும், இதை தொடர அழைப்பவர்கள்
மகேஷ் - ரசிகன்
கொத்துபரோட்டா பிரசன்னா
இந்திராவின் கிறுக்கல்கள்
நான் வாழும் உலகம் - ரியாஸ்
எழுதுங்க !!!! தெரிஞ்சிக்கிறோம்
