Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்

தூக்கம் எதிரியாய் தெரியும் சில இரவுகளில் மனதில் கிறுக்கியவை சில

*** இரவுக் கவிதைகள் ***


அவளெனும் 
வீணையை மீட்டினேன் 
உச்சஸ்தாயியில் 
பிறந்தது 
மௌன ராகம்....

###############################

இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ 
அந்த 
அழகின் இலக்கணத்திற்கு 
முன்னால்

###############################

அன்று 
வெட்கச் சிணுங்களில் 
ஒளிந்து மறைந்தவள் 
இப்போதும் 
சிணுங்குகிறாள் 
என்னுள் 
ஒளிந்து கொண்டு 
 
###############################
 
அவள்
பார்வையால் 
தீணி போடாததால் 
இப்போது பசியெடுத்து 
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
 
 
 *** இரவல் கவிதை  ***
 
எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க, அதான்  ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தோழி மதுர பொண்ணுகிட்ட சில கவித எழுதி கேட்டேன்...அதையும் பாருங்க

அன்பே உன் நினைவலைகள்
கனல் நெருப்பாய் என்னை
கடந்து செல்வதால்
கண்களை மூடினாலும்
அதிலும் நீ மட்டுமே தெரிகிறாய்.
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உனக்கான அழகிய கவிதையொன்றை
அலசி கொண்டு இருந்த போது
உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
பறந்து வந்தமர்ந்தது 
அதுவோ
உனக்கான கவிதை இந்த
உலகத்தில் இல்லை என்ற
செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

அவளும் அந்த குட்டிக் கவிதைகளும்

பூவுக்குள்...

தோட்டத்திற்கு
சென்று
நீ
ஒரே ஒரு
பூவை
பறித்து
சூடினாய்
மறு நிமிடமே
மற்ற
பூக்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன
அடுத்த பிறவி
எடுத்தாவது
உன்னை
அடைவேனென்று

கோலடிக்கிறாய்
..

ஏ பெண்ணே
என் இதயம்
என்ன
கால்ப்பந்து மைதானமா
தினமும்
உன்
டாலடிக்கும்
பார்வையால்
கோலடிக்கிறாய்

கை கொடு...


உன்
அசட்டுக்
கன்னக் குழிகளில்
தடுக்கி விழுந்தவன்
இன்னும்
எழவில்லை
வாழ்க்கைக்கு கூட
வேண்டாம்
எழுவதற்காவது
கை கொடுத்துவிடு
கவிதையே


சிக்கு...


உன் வீட்டு வாசலில்
சிக்குக் கோலங்களை
சிக்காமல்
போடுகிறாய்
சிக்கிக்
கொண்டது
நானல்லவோ

மழை பெய்யும் நேரம்...



மழை பெய்யும் நேரம்...

மழை
நாளில்
நீ
நடந்து
சென்றாய்
மழை
துளிகள்
சண்டை போட்டு கொண்டன
உன் மேல் விழுவதற்கு
நானும் தான் .

------------------------------------------------------


வானவில்...

உன்னை
பார்க்கும்
நிமிடங்கள்
யாவும்
வானவில்
வண்ணங்களாக
மலர்கின்றன
பெண்ணே
உன்னை சந்திக்காத
நொடிகளில் மட்டும்
தனிமை காட்டில்
அலைந்து திரிகிறேன்
உன் எண்ண அலைகளோடு

----------------------------------------------------------


நான் தைரியமற்றவன்....

ஒரு
நூறு
மனிதர்களை
அடித்து
நொறுக்கும்
வாலிபத்தின் நரம்புகள்
என்னிடம் இருந்தாலும்
அவளிடம்
காதலை
சொல்ல சென்று
கண்களை பார்த்து
திரும்பி
வரும்போது
கோழயாகிறேன்
நான்
தைரியமற்றவனா....

அவளின்
பார்வை
சம்பவத்திற்காக
காத்திருந்து
ஏமாறும்
நேரங்களில்
நான்
ஏமாளியா...

இல்லை
அவள் முன்
ஏமாளியாகவும்
கோழையாகவும்
இருக்கவே
ஆசை..

காதல் கவிதை....

நிறைய ஆணி இருப்பதால் ,பதிவுகளை எழுத இயலவில்லை,அதான் இந்த கவிதையாவது போடுவோமே என்று வந்தேன்


எக்ஸாம் கவிதை ...

பரிட்சை
பயத்தில்
பக் பக்
என்று
துடித்துக் கொண்டிருந்தது
இதயம்
அவள்
வந்தால்
பேஸ் பால்
ஆடியது
பட படவென
பட்டாம்பூச்சியாய்
பறந்தது...

_________________________

இசை....

உன்னில்
மெட்டுப் போட
முயன்றேன்
குட்டினாய்

செத்துப் போ
என்றால் கூட
போய் விடுவேன்
விட்டுப் போ
என்றல்லவா
சொல்லிவிட்டாய்..

கழுத கழுத.....

கவித கவித....


பெண்ணே
நான்
உன்னை
வெறித்து
வெறித்து
பார்த்துக்
கேட்டக்
கேள்விகளுக்கு
நீ
தந்த
ஒரே
பதில்
உயர்தரப்
புன்னகை

________________________________

உலகத்தமிழ் மாநாடு.....

உலகத்தமிழ் மாநாட்டில்
சிறந்த கவிதை
உன் வருகை

Related Posts with Thumbnails