Showing posts with label படிப்ஸ். Show all posts
Showing posts with label படிப்ஸ். Show all posts

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

இதென்ன கல்வியா ?

முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி  நம்ம  ரவுண்டு தான் 

 பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று

இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில்  முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்


அரசு பள்ளிகளிலிருந்துதான் விளையாட்டுத் துறைக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்பது சந்தோசத்திற்குரிய விசயம்,ஏன்னா முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வாய்க்காத ஒன்றாகிவிட்டதே

விளையாட்டுத்தான் சொல்லித் தரல பாடமாவது ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறானுவோளா இந்த மெட்ரிக் பள்ளிகளில் என்று பார்த்தால்,அதுவும் கவலைக்குரிய நிலை தான்

நான் படித்த மெட்ரிக் பள்ளி ஒன்றின் நிலைமையை பாருங்களேன்

@@  விளையாட்டுதான் இல்லையென்பதால் மைதானமும் இல்லை

@@  ஆசிரியர்களாக  பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க

@@   LKG வகுப்புக்கு பாடம் நடத்துபவர் பட்டதாரியாக இருக்க வேண்டாம், பத்தாம் வகுப்புக்கு நடத்துபவர் கூட  பட்டம் பெற்றவராக இல்லையே
 
@@  கல்லூரியில் வேதியல் படித்தவரை இங்கு வரலாறு நடத்த சொல்கிறார்கள்,அவரும் நடத்துகிறார் (வேறு வழி)

@@   ஒரு எழவையும் மாணவர்களுக்கு நடத்தாமல் பொட்ட மனப்பாடம் செய்ய சொல்லி பரிட்சை எழுத வைக்கிறாங்க

@@  விளையாட்டுமில்ல,பாடமும் நடத்த வக்கில்ல  டாய்லட் கூடவா சுத்தம் செய்யாமையா இருக்கனும் கொடுமடா

@@  இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்

@@  ஆயிரம்,ஐநூறுன்னு வேனுக்கு பணம் வாங்குறானுங்க,வேனோட நிலைமையா பாத்தா ரொம்ப கவலைக்கிடம்

@@  ஓட்டும் டிரைவருக்கு லைசன்சு இல்ல

@@  ஒரே ட்ரிப்பில் 60 பேரை ஏத்தி பிஞ்சுக் குழந்தைங்க உசுரெடுக்குறது

@@  இவனுக கெட்ட கேட்டுக்கு டொனேஷனும் எட்டாவது சேர்க்க என்ட்ரன்சு எக்சாமும்  ஒரு கேடு :(

இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்

✍ நுழைவுத் தேர்வு அனுபவங்கள்...

மூனு வருசம் முக்கி முக்கி படிச்சி B.sc முடிச்சாச்சி, கடைசி செமஸ்டர் ரிசல்ட்டும் வந்துச்சு, நல்ல வேளை அரியர் ஒன்னும் விழல,சரி அடுத்தது என்னான்னு யோசிச்சா,கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் தெரிஞ்சது MCA மட்டும் தான்,திரும்ப மூனு வருசம் படிக்கனுமாம் அதான் பிரச்சனையே :(

சரி நாம பாக்காத படிப்பா,அதையும் பாத்துடுவோம்னு போணோம்,இந்த MCA வுக்கு tancet,tancet ன்னு நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள் (ரெண்டு தேர்வான்னு கேக்க பிடாது ).அதுல ஒரளவுக்கு மார்க் எடுத்தா தமிழ்நாட்டுல உள்ள முன்னனி கல்லூரி எதுலயாச்சும் கண்டிப்பா இடம் கிடைக்கும்,அங்கெல்லாம் 100 சதவீதம் campus placement தருவாங்கன்னு ஆசைய வேற கிளரி விட்டுட்டாயிங்க :)

சரி உடனே அந்த நுழைவுத் தேர்வுக்கும் அப்ளை செய்தேன்,அதோடு சரி என்னுமோ பிரிப்பேர் வேற செய்யனுமாமே,நாங்கெல்லாம் செமஸ்டர்க்கே தூங்கி எழுந்து அப்டியே போற ஆளுங்க,இது என்ன பிஸ்கோத்து பரிட்சை :)))

அந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளும் வந்துச்சி,கூட்டமா போனோம்,அண்ணாமலை பல்கலையில் தான் நடந்தது,சீக்கிரமா போய் உருப்படியா சைட் மட்டும் தான் அடிச்சோம்(நமக்கு வேற என்ன தெரியும்)

அவனவன் ஃபார்முலா,அது இது லொட்டு லொசுக்குன்னு கடைசி நேரத்துல விழுந்து விழுந்து படிச்சிகினு இருந்தானுவோ, நாங்க சாவகாசமா கால ஆட்டிகிட்டு அவனுகள பாத்து சிரிச்சிகிட்டு இருந்தோம்(எவ்வளவு கஷ்டமான வேலை தெரியமா)

பரிட்சை நேரமும் வந்துச்சி,என் ஹால பார்த்து போய் உட்கார்ந்தேன்,சோத்தாங்கை பக்கம் ஒரு அட்டு பிகரு ஒக்காந்திருந்துச்சி(அந்த பக்கம் திரும்பவே முடியல),முன்னாடி பய புள்ள ஒருத்தன்,ஆனா எனக்கு பக்கத்து சீட்டு மட்டும் காலியா இருந்தது.

பென்சில தீட்டிக்கிட்டு இருந்தேன்(அப்பரம் மூளையா இருக்கு தீட்ரதுக்கு) ,EXCUSE ME SIRன்னு வெளியிலிருந்து ஒரு சத்தம்,யார்னு பாத்தா ஒரு செம செம ஃபிகர்,சட்டுனு உள்ள வந்து என் பக்கத்துல ஒக்காந்துச்சி(புரியுது கொஞ்சம் கேப் விட்டுத்தான்).எனக்கு ரொம்ப சந்தோசம்

இந்த ரெண்டு மணி நேரம் பொழுத போக்குறதுக்கு இத விட நல்ல ஐடியா இருக்க முடியாது,கொஸ்டின் பேப்பர் கொடுத்தாங்க,ஆன்சர் பேப்பரும் கொடுத்தாங்க,கொஸ்டின் பேப்பர பிரிச்சி நமக்கு தெரிஞ்ச ஒரு கேள்வி கூடவா இருக்காது பிரித்தேன் (ஆமாமாம்)


தேடினேன் தேடினேன் ஆங்கில இலக்கணத்தில் தேடினேன், கனிதத்தில் தேடினேன்,கணிப்பொறி பிரிவில் தேடினேன்.ஒன்ணே ஒன்னு தெரிந்தது என்ன REGISTER NUMBER ன்னு ஒன்னு கேட்டிருந்தாங்க,அத ரொம்ப ஈசியா எழுதிட்டேன்,ஹால் டிக்கெட்ட பாத்தே (அடடா இது தான் உள்வளத் திறமையா)

ஒரு எழவும் தெரியல,அரை மணி நேரம் வீணா போனது தான் மிச்சம்(ஆமாம் மிச்ச நேரத்துல கிழிச்சிட போறாறு),சரி பக்கத்துல உக்காந்திருக்குற பொன்னயாவது பாப்போமே ன்னு பாத்தேன்,என்ன கொடும அது கணக்கெல்லாம் போட்டுப் பாக்குது அந்த புள்ள(ரொம்ப பேட் கேர்ள்)


1 மணி நேரம் இப்டியே ஓடுச்சி, அப்போதைக்கு ஒரு திடீர் ஞானோதையம் இங்க நடந்ததையெல்லாம் நம்ம பதிவுல போட்டா எப்டி இருக்கும் ? போட்டா ஒரு முப்பது ஓட்டு விழாது (ஆமாம் ரொம்ப முக்க்கியம்),இப்டி யோசிச்சிகிட்டே ஒரு அரை மணி நேரம் தூங்கிபுட்டேன்(கண்ண தொரந்துகிட்டே)

திடீர் மணி அடித்தது என் மண்டைக்குள்ளும் தான்,கடைசி அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு எழுத வேண்டிய கேள்விகள் மீதமிருப்பது 100 மட்டும் தாம் (மொத்தமே அதுதானே)

சரி நம் அறிவுக்கு சரியான் டெஸ்ட் தான் (அது இருக்கா),இனிமேல் யோசிச்சி எழுதுனா 10 கூட எழுத முடியது,யோசிச்சேன்(மூக்குல கைய வச்சிகிட்டு தான்) :)

கொஸ்டின் பேப்பர ஓரமா வைத்துவிட்டு,ஆன்சர் ஷீட்ட மட்டும் எடுத்தேன்,எல்லாமே கொள்குறி வகை கேள்விகள்(choose the right answer) தான் என்பதால்,என் அறிவை பயன்படுத்தி D,A,B,C,A,D,C,B,C,A,D கால் மணி நேரத்தில் 50 வினாக்களுக்கு இப்படியே விடையளித்து விட்டேன்(மிகப் பெரிய சாதனை தான்),மீதம் 50 சாய்ஸ்ல விட்டுடேன்(என்னோட சாய்ஸ்தான்)

இதுல என்ன கூத்துனா தவறான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் வேற எடுப்பானுங்களாம்,அடக் கொடுமையே நமக்கு வர்ரதே ஒன்ணோ ரெண்டோதான் அதையும் எடுத்துட்டா !! எங்க போறது (துபாய்க்கு)

பரிட்சை முடிச்சி வந்தா அவனவன் ஆன்சர் சொல்லிப் பாக்குறானுவோ,ஹா ஹா நமக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல!!

ஒருத்தன் சொன்னான் கன்ஃபார்மா 30 என்றான்,இன்னொருத்தன் 22 என்றான்,நான் சிரிச்சிகிட்டே எனக்கு -3 என்றேன் (உண்மைதானே)

சரி எழுதியாச்சு ரிசல்டும் வந்தது,மார்க பாத்தா எல்லாம் தலைகீழ் , 30 சொன்னவனுக்கு 3 தான் வந்துச்சி,-3 (நான் தான்) சொன்னவனுக்கு ஹாஹா +13 மார்க் (ஆண்டவன் நல்லவங்கள கைவிட மாட்டான் ஹா ஹா),செம சிரிப்பு தான் எனக்கு :))

எவண்டா எனக்கு +13 போட்டதுன்னு எனக்கு டவுட்டு வேற,அதனால ரிசல்ட் உண்மையான்னு ஒரு பத்து,பதினைந்து தடவையாவது பாத்திருப்பேன்(நம்பவே முடியல)

எல்லா பயலுவோலும் கேட்டானுங்க எப்டி டா எடுத்த வெரி குட் டா, நான் சொன்னேன் அதெல்லாம் புத்திசாலிங்களாலதான் முடியும் டா(ஒத்தயா ரெட்டயா போட்டதுல வந்ததுன்னு சொல்லிடுவேணா)

நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் ,அதனாலதான் என் மார்க் ஸ்டேட்மன்டையே இங்கே போட்டுட்டேன் (நேர்மை,பொறுமை,எருமை)

இவ்வளவு பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி !!!

Related Posts with Thumbnails