Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

அழகு + நட்பூ

 "எதையும் அழகாக ரசிக்கலாம் அழகான மனமிருந்தால்"

மூக்கும் முழியுமாய் ஏமி ஜாக்சன் கலரில் இருந்தால் தான் அழகா, எதுவும் அழகு தான் என் மனம்  அழகாக இருப்பதால்

சாக்கடை முதல் சாக்லெட் பேப்பர் வரை
எல்லாம் அழகாகவே தெரிகிறது 

ச்சீ என்று விரட்டும் நாயை தோ என்று அழைத்து கொஞ்சினால் அழகுதான், ஆமாம் இதெல்லாம் எனக்குள் எப்படி வந்தது 


ஆம் அவள் தான் அவளே தான், என் கருகிப் போன இதயத்தை கலர் கலராய் மாற்றியவள் தான்

நிறைய மாறிவிட்டேன் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன், எனக்குள்ளும் ரசனையை விதைத்துவிட்டாளே

நான் கூட கவிதை எழுதுறேன்னா பாத்துக்கங்க :)


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"இப்படித்தான் இருக்கணும் என்றது காதல், எப்படியும் இருக்கலாம் என்றது நட்பு என் நட்பு "

 கட்டுப்பாடற்ற காட்டாறாய் கூட இருக்கலாம் நட்பு,  வாடான்னா போவான்  அடிடான்னா கடிப்பான், எதாவது வம்பு பண்ணிக்கிட்டே இருப்பான், எல்லாம் நட்பு தான்

இந்த அழகான நட்பூ சில நேரங்களில் செயற்கை பிளாஸ்டிக் பூவாக கூட இருந்துவிடும் போது ஏமாற்றங்கள் எனக்கு மட்டுமே :(


 நட்பூ  பூக்கட்டும் இயற்கையாய்

டிஸ்கி : மொக்கையாயிட்டுன்னு தெரியுது இருந்தாலும் எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க :)
 

அவளும் அந்த குட்டிக் கவிதைகளும்

பூவுக்குள்...

தோட்டத்திற்கு
சென்று
நீ
ஒரே ஒரு
பூவை
பறித்து
சூடினாய்
மறு நிமிடமே
மற்ற
பூக்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன
அடுத்த பிறவி
எடுத்தாவது
உன்னை
அடைவேனென்று

கோலடிக்கிறாய்
..

ஏ பெண்ணே
என் இதயம்
என்ன
கால்ப்பந்து மைதானமா
தினமும்
உன்
டாலடிக்கும்
பார்வையால்
கோலடிக்கிறாய்

கை கொடு...


உன்
அசட்டுக்
கன்னக் குழிகளில்
தடுக்கி விழுந்தவன்
இன்னும்
எழவில்லை
வாழ்க்கைக்கு கூட
வேண்டாம்
எழுவதற்காவது
கை கொடுத்துவிடு
கவிதையே


சிக்கு...


உன் வீட்டு வாசலில்
சிக்குக் கோலங்களை
சிக்காமல்
போடுகிறாய்
சிக்கிக்
கொண்டது
நானல்லவோ

மழை பெய்யும் நேரம்...



மழை பெய்யும் நேரம்...

மழை
நாளில்
நீ
நடந்து
சென்றாய்
மழை
துளிகள்
சண்டை போட்டு கொண்டன
உன் மேல் விழுவதற்கு
நானும் தான் .

------------------------------------------------------


வானவில்...

உன்னை
பார்க்கும்
நிமிடங்கள்
யாவும்
வானவில்
வண்ணங்களாக
மலர்கின்றன
பெண்ணே
உன்னை சந்திக்காத
நொடிகளில் மட்டும்
தனிமை காட்டில்
அலைந்து திரிகிறேன்
உன் எண்ண அலைகளோடு

----------------------------------------------------------


நான் தைரியமற்றவன்....

ஒரு
நூறு
மனிதர்களை
அடித்து
நொறுக்கும்
வாலிபத்தின் நரம்புகள்
என்னிடம் இருந்தாலும்
அவளிடம்
காதலை
சொல்ல சென்று
கண்களை பார்த்து
திரும்பி
வரும்போது
கோழயாகிறேன்
நான்
தைரியமற்றவனா....

அவளின்
பார்வை
சம்பவத்திற்காக
காத்திருந்து
ஏமாறும்
நேரங்களில்
நான்
ஏமாளியா...

இல்லை
அவள் முன்
ஏமாளியாகவும்
கோழையாகவும்
இருக்கவே
ஆசை..

சாலையோரக் கவிதைகள்

இந்த கவிதைகள் நான் கிறுக்கியது என்ற பதிவில் எழுதியது,இப்போது அந்த பதிவுகள் அழிந்துவிட்டது,உங்களுக்காக இங்கு...

விழியீர்ப்பு விசை...






கல்லூரி
காலங்களில்
நீ
அந்த
நீல நிற
சுடிதாரில்
உன்
தோழிகள் படை சூழ
வலம் வருவாய்
நான்
கடைக்கண் தரிசனம்
கிடைக்குமா
என ஏங்கிய
நேரத்தில்
மலையின் பின்
உதிக்கும்
ஆதவனை போல
உன்
கன்னக் குழிகளில்
உதித்த
அந்த
வெட்க்கச்சிரிப்பை
கண்டு
நான்
வெட்கினேன்

உன்
விழியீர்ப்பு விசையில்
அந்த
புவியீர்ப்பு
விசை கூட
தோற்று விட்டதடி

____________________________________

அழகுக் குறிப்பு.....

உன்னை
பின்தொடர்ந்து
வருகையில்
நீ
அள்ளி வீசினாய்
அழகுக் குறிப்புகளை
ஆம்
உன்
செருப்பும்
அழகின்
குறிப்பு தானே

______________________________________

அவளின்றி



இப்போதெல்லாம்
பூக்களை
பார்த்து
பரிகசிக்கிறேன்
நீ
எல்லாம்
எம்மாத்திரம்
என்னவள்
முன்பு...

Related Posts with Thumbnails