Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

பெண் சிங்கம் சூ கி


என்னடா சூ கி - என்று என்னெனவோ சொல்றானே என்று பாக்காதீங்க,இவர் தான் பர்மாவின் புரட்சிப் புயல்.

20 வருடங்கள் வீட்டுச் சிறையில் அடைத்தும் தளராதவர் பர்மாவின் சூ கி(suu kyi)இவரது அப்பா ஆங் சாண்(aung san) நவீன பர்மாவின் தந்தை,அவர் தான் பிரிட்டனிடமிருந்த்து பர்மாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்,ஆனால் அதற்கடுத்த சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்டார்,பர்மா ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் உயர் படிப்பு முடித்த சூ கி 1988 ஆம் ஆண்டு பர்மா திரும்பினார்,பர்மாவில் ராணுவத்தின் அராஜகத்தை கண்டு வெகுண்டார்,ஜனனாயக ஆட்சி மலர முழு மூச்சுடன் இங்கினார்.

அவருக்கு மகாத்மா காந்தி தான் ரோல் மாடல்,அஹிம்சை வழியிலேயே தன் போராட்டங்களை நடத்தினார்.

1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சூ கி-க்கு ஆதரவாக 82 சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள்.ஆனால் ராணுவமோ இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்து சூ கி-யை வீட்டுக் காவலில் அடைத்தது.


கடுமமையான தனிமையான வீட்டுச் சிறையில் வாடினார் சூ கி,கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் கணவரை பார்க்க கூட தடைகளை விதித்தது,அவர் இறந்த போதும் கூட கடும் கட்டுப்பாடுகளுடன் தான் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

"மீண்டும் பர்மாவுக்கு வர மாட்டேன்" என்கிற உத்தரவாதத்தோடு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தால் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை என்று பர்மா அரசு பேரம் பேசியது , அசைந்து கொடுக்கவில்லை இந்த இரும்புப் பெண்மணி.

2002 இல் ஐ.நா-வின் தலையீட்டால் அரசுக்கும்,சூ கி - க்கும் இடையில் ஒப்பந்தம் உருவானது.உடனடியாக வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதோடு விட்டதா சூ கி செல்லுமிடமெல்லாம் கலவரத்தை உருவாக்கியது அரசு,இதையே காரணம் காட்டி மீண்டும் வீட்டுச் சிரையில் அடைத்தது.

பல உலக நாடுகள் எச்சரித்தும் இன்று வரை அசையவில்லை அரசு,காரணம் சீனா-வாகத்தான் இருக்க முடியும்,ஏனெனில் நம் இந்தியாவிற்க்கும் சீனா - விற்க்கும் இடையில் தான் இந்த பர்மா இருக்கிறது.பர்மா தன் கையில் இருந்தால் இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்ற ஆசையில் தான் இப்படி செய்து வருகிறது.

சூ கி இந்தியாவிற்க்கு ஆதரவானவர்,அதனால் தான் இன்று வரை அவருடன் மல்லுக்கு நிற்கிறது.இதுதான் உலக அரசியலோ.....


புரட்சி எரியும்..........

புரட்சியின் மறுபெயர் "சே"


புரட்சியின் அடையாளம் சே குவேரா , வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.

இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே,சிறு வயதிலிருந்தே அநீதியை கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார்.பணக்காரக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் தோழனாக இருந்தவர்.

அமெரிக்க முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே- வின் வாழ்கையை திசை மாற்றியது .முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தார்.இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார்.

முதலாளித்துவ அமெரிக்காவின் கீழ் இருந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தும் என நம்பினார் "சே".



அர்ஜென்டீனாவில் பிறந்த சே கியூபா பரட்சி வெற்றி பெற களம் இறங்கினார், அமெரிக்கா ஸ்தம்பித்தது, காஸ்ட்ரோ குவேராவை தன் நம்பிக்கையான தளபதியாக கருதினார்.மக்கள் சக்தி கியூபா வில் வெற்றி பெற்றது,சே விற்கு அமைச்சர் பதவி வழங்கினார் காஸ்ட்ரோ.

கொஞ்ச காலத்தில் அமைச்சர் பதவியை துறந்து காங்கோவின் விடுதலைக்கு போராட ஆப்ரிக்காவிற்கு சென்றார் ,அங்கிருந்து பொலீவிய நாட்டு விடுதலைக்காக போராடினார்.

சே வை விடாமல் துரத்தியது அமெரிக்க சி ஐ எ , கொரில்லா வீரர்களுடன் கடும் போர் ஏற்பட்டது,அங்குதான் சே சுட்டுக் கொள்ளப் பட்டார் .கலங்கினார் காஸ்ட்ரோ தன் ஒரு கையை இழந்தது போல் துடித்தார்,இன்று வரை அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ.


"அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே " - சே குவேரா

இன்று சே வின் பேத்தியான லிடியா குவேராவும் ஒரு புரட்சிக்காரர் தான்,பசுமையை நோக்கி புரட்சி செய்கிறார் இந்த பெண் குவேரா


புரட்சி தொடரும்................

Related Posts with Thumbnails