Showing posts with label தாதாக்கள். Show all posts
Showing posts with label தாதாக்கள். Show all posts

உலகின் ஏழாவது பணக்காரர் - 3

கொலம்பிய அரசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை,அமெரிக்க அன்னாச்சிக்கு புரிந்து விட்டது,இவனை இப்படியே விட்டு வைத்தால் நாமும் கொலம்பியா போல் ஆகிவிடுவோம்,அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரீகனுக்கு இந்த கொக்கெய்ன் மேட்டர் அப்போது தான் தெரிய வந்ததாம்.


சுதாரித்து கொண்ட அதிபர் கொலம்பிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அன்புடையிர்,சர்வமங்களம் உண்டாகட்டும் நாளது 1914-ம் ஆண்டு அமெரிக்காவிலே ஒரு சட்டம் இயற்றபட்டது,அதற்கு பெயர் ஹாரிசன் நார்காடிக்ஸ் ஆக்ட்,அதுதான் போதை தடுப்பு சட்டம்.மரிஜ்ஜுவானா,கொக்கெய்ன்,ஓபியம்,கஞ்சா,அபின் உட்பட அனைத்து கசுமாலங்களும் இங்கே தடை செய்யப்பட்ட பொருள்களாகும் யாரோ உங்க ஊரு பரமபுருஷன் எஸ்கோபராமே,அவன் வேலைகள் தான் என்பதை எங்கள் உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டேன்,நீங்கள் என்ன சொல்கிறீர்.

அமெரிக்காவிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்த பிறகு அவனை அடக்க திணரிக் கொண்டிருந்த கொல்மபிய அரசு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது,ஒப்பந்ததில் போதை கடத்தல்காரர்களை பிடிக்க அமெரிக்காவும்,அதை குறைக்க கொலம்பியாவும் உதவி செய்ய வேண்டும்.

அந்த காலகட்டத்தில் தான் ஒரு பாதுகாப்பிற்காக லிபரல் கட்சி மூலமாக அரசியலில் குதித்து மேலவை உறுப்பினர் ஆனான் இந்த எஸ்கோபர்.

மேலவைக்கு இரண்டாம் நாள் சென்றான்,சபையில் போதை கடத்தலை குறிவைத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கு எஸ்கோபர் பதில் உரை ஆற்ற அழைக்கப்பட்டார்.

ஒவ்வொரு கொலம்பியனும் தன் காதுகளை தீட்டிக் கொண்டு அவன் உரையை கேட்க தயாரானார்கள்,தன் தொண்டையை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்த எஸ்கோபர்

மாண்புமிகு மேலவை தலைவர் அவர்களே எனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத போதை வர்த்தகம் பற்றி என்னை பேச அழைத்திறுக்கிறார்கள்,அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது,ஆகவே வேறு ஒரு விசயத்தை இங்கே பேசுகிறேன்,நம் நாட்டில் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத பாமரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா,அவர்களை பற்றி நீங்கள் விவாதித்ததுண்டா,நான் இப்போது கிராமங்களை தத்தெடுத்து வருகிறேன் உங்களால் முடியுமா.இதை பற்றி தனி விவாதம் வைத்து எனக்கு பாராட்டு விழா அல்லவா நடத்தி இருக்க வேண்டும்.


சபை கலைந்துவிட்டது,யாருக்கு பேச்சு வரும்

எஸ்கோபர் முழிபிதுங்கி மாட்டிக் கொண்டு அசடு வழிந்த விஷயம் செய்தித் தாள்களில் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு,அத்தனை தினசரிகளும் முதல் பக்கத்தில் எஸ்கோபர் புகழ் பாடப்பட்டிருந்தது....தலையில் அடித்துக் கொண்டார்கள்....

அப்பறம் என்ன ஆனது...அடுத்த பதவில்

டிஸ்கி : என்னடா எஸ்கோபர கொள்ள வந்த கூட்டத்த பத்தி சொல்றன்னு சொன்னானே,எங்கன்னு நீங்க கேக்குறது புரியுது...இவை தவிர்க்கமுடியாத வார்த்தைகளாய் போய் விட்டதே,முடிந்த வரை சுருக்கி அடுத்த பதவில் முற்றும் போட்டுட வேண்டியது தான்....

உலகின் ஏழாவது பணக்காரர் - 2

கடந்த பதிவில் எஸ்கோபர் என்ற போதை ராஜா உருவானதை பார்த்தோம்.

எஸ்கோபர் போதை தொழில் தான் செய்தானே தவிர,அதில் ஒரு நேர்மையை கடைபிடிப்பவன்,வித்யாசமாக சிந்திப்பவன் கூட,தன் தொழிலை விருத்தி செய்ய உருவாக்கிய நெட்வொர்க் தான் மெடலின் கார்ட்டல்


மெடலின் என்ற கொலம்பிய நகரத்து வியாபாரிகளை ஒன்று சேர்த்து ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த மெடலின் கார்ட்டல்,எஸ்கோபர் இரண்டு வகையாக பிஸ்னஸ் மாடல்களை மெடலின் கார்டலில் வைத்திருந்தான்.

ஒன்று கொக்கோ பயிரிட்டு அதை தரமிக்க கொக்கெய்னாக மாற்றி வியாபாரம் செய்வது,இன்னொன்று மற்ற வியாபாரிகளிடமிருந்து ஒரு விலை கொடுத்து வாங்கி அதை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடத்துவது

கொலம்பிய நாட்டின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க காரணம் மக்களின் சக்திதான்,போதை காசு தான் என்றாலும் கொடுப்பதற்க்கு எஸ்கோபரால் மட்டும் தான் முடியும் என்கிறார்கள் மக்கள்

மிகப் பெரிய அரசாங்கத்தையே நடத்த ஆரம்பித்தான் எஸ்கோபர்,புயல் காலங்களில் அசுர வேகத்தில் உதவிகளை செய்தது இவனது குழு


ஒரு காலத்தில் கடும் புயல்,மழையால் மக்கள் தொற்று நோயால் மடிந்து கொண்டிருந்தனர்,சுகாதாரமற்ற நிலை உருவாகியது கொலம்பியாவில்.பார்த்தான் எஸ்கோபர் மருந்து பொருட்களை ஸ்பைனிலிருந்து இறக்கினான்,அதிரடியாக செயல்பட்டு மக்களை காப்பாற்றினான்.

இத்துடன் விட்டிருந்தால் தமிழ் பட ஹீரோவாக மட்டும் தான் ஆகியிருப்பான்,அதோடு விடவில்லை யாருக்கு என்ன வேண்டுமோ அள்ளிக் கொடுத்தான்,விடு இல்லையா கட்டிக் கொடுத்தான்,பணம் வேண்டுமா...கொடுத்தான்,ஏழைகளுக்கு உதவ தயக்கமே காட்ட மாட்டான் இந்த எஸ்கோபர்.

மொத்தத்தில் கொலம்பிய மக்களின் பரமபிதாவாகவே மாறிவிட்டான் எஸ்கோபர்,கொலம்பிய ராபின் ஹுட்டாக மாறினான்.

கொலம்பிய அரசால் அவனை ஒன்றுமே செய்ய இயலவில்லை,ஆனாலும் இவனை போட்டுத் தள்ள ஒரு குழு உருவானது..அது தான்....அடுத்த பதிவில்

உலகின் ஏழாவது பணக்காரர்

உலகின் சிறந்த கார்ப்பரேட் நிருவனத்தின் தலைவர்,சிறந்த நிர்வாகி,உலக பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் என்றெல்லாம் இவரை புகழ முடியாது,ஏனென்றால் இவர் உலக போதை உலகின் முடிசூடா மன்னனாவார்,அவர் தான் "பாப்லோ எஸ்கோபர்"


உலக வரைபடத்தில் அழகான கோன் ஐஸ் மாதிரி வட அமெரிக்காவுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி தேசம் தான் கொலம்பியா.

போதை கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா என்றால்,அதன் குல தெய்வம் இந்த எஸ்கோபர்.கொலம்பியா அசாதாரண கனிம வளங்களை கொண்ட நாடாகும்,சுதந்திரத்திற்க்கு பிறகு எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளை போலவே பல உள்நாட்டுக் குழப்பங்கள் வந்தது,எல்லை தகராறு,சிவில் யுத்தம் போன்றவற்றால் பொருளாதாரம் சின்னாபின்னமானது.

அமெரிக்க அன்னாச்சி உள்ளே வந்தார்,பல கொரில்லா இயக்கங்களுக்கு பண உதவியும்,பயிற்சியும் அளித்து கலவரத்தை உருவாக்கியது,ஏழை விவசாயிகள் நிலத்தை வைத்துக் கொண்டு சும்மா இருந்தனர்.

அந்த நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து போட்டு,பயிரிட்டதுதான் கொக்கோ என்ற செடி,இந்த செடியிலிருந்துதான் கொக்கெய்ன் உருவாக்கப்படுகிறது.


பச்சை கொக்கோ இலைகளை கொதிக்கவைத்து,வடிகட்டி,ஆறவைத்து,மீண்டும் வடிகட்டி,பொடியாக்கி,ம்ம்ம் இந்த மாதிரி அற்புதமாக கொக்கெய்ன் உருவாக்கும் வல்லுனர்கள் பலர் எஸ்கோபர் கையில் இருந்தனர்.

எஸ்கோபர் என்ற போதை ராஜா இங்கு தான் முளைத்தான்,இந்த கொக்கெய்ன் வேறு எங்கும் பயிரிடுவதில்லை,பயிரிட்டாலும் அதை சிறந்த தரத்திற்க்கு போதை மருந்து தயாரிக்க ஆட்கள் வேறு எங்குமில்லை என்பதை புரிந்து கொண்டான் எஸ்கோபர்.

கொக்கெய்ன் வியாபாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல முடிவு செய்தான்,சரி இது என்ன கடலை மிட்டாய் பிசினசா,போதை பொருட்களாச்சே எப்படி அரசாங்கம் சும்மா இருக்கும்

அதற்கு எஸ்கோபர் சொன்ன வார்த்தைகள்

"பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை விலைக்கு வாங்கிவிடுவேன்,முரண்டு பிடிப்பவர்களை கொன்று நதியில் வீசிவிடுவேன்"

கொக்கெய்ன் வியாபாரம் கோடி கோடியாக கொழித்தது,பணப் புழக்கம் எக்கச்சக்கம்,அந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருந்தான் எஸ்கோபர்,ஆம் உலகின் ஏழாவது பணக்காரனானான் இந்த போதை மேதை.

அமெரிக்காவே பாதி அடிமையாக்கிவிட்டது இந்த கொக்கெய்னுக்கு அந்த அளவுக்கு போதை..........அப்படி ஒரு போதை.......


எப்படி அரசாங்கத்தையும்,அமெரிக்காவையும் சமாளித்தான்,அவனுக்கு பிரச்னையே வரவில்லையா.....அடுத்த பதிவில் பார்ப்போம்

Related Posts with Thumbnails