எந்திர இசை மழை


தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

எங்க ****** சூப்பர் ஸ்டார் ****** பட பாடல் வெளியிடுன்னாலே தமிழ்நாடு ஒரு மாதிரியாத்தான் இருக்கும்,இதில் ரஹ்மான் வேறு இசை அமைத்திருப்பதால் உலகமே ஒரு கிறக்கத்துடன் இருக்கிறது.

பாடல்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாலேயே சூரியன் எப்.எம் புண்ணியத்தால் இரண்டு பாடல்கள் நேற்றே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது

ரஹ்மான் பாடல்கள் கேட்ட உடனேயே பிடிக்காது,கேட்க கேட்கதான் பிடிக்கும் (இது உலகத்துக்கே தெரிஞ்ச விசயமாச்சே)

சரி பாடல்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கெல்லாம் நமக்கேது ஞானம்
ஏதோ கேட்டத உங்ககிட்ட சொல்றேன்

@@ முழுக்க முழுக்க இயந்திரத்தனமான இசை(பேரே அதான)

@@ புதிய மனிதா தலைவரின் அறிமுகப் பாட்டென்று
நினைக்கிறேன்

@@ ரோபோட்டிக் எஃபெகிட்டில்
ரஹ்மான் பின்னி பெடலெடுக்கிறார்

@@ எஸ்.பி.பி யின் ஏற்ற இறக்கத்திற்கே நூறு கோடி கொடுக்கலாமுங்க

@@ பெண் குரல் கதீஜா ரஹ்மான் என்று இருக்கு-அது யாரென்று எனக்கு தெரியல,யாராவது சொல்லுங்க (குட் கொஸ்டின்),ஆதுவும் நல்லாத்தான் இருக்கு

புதிய மனிதா பூமிக்கு வாஆஆஆஆஆ

நான் பெற்றது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு

நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி


@@ எல்லா பாடல் வரிகளும் சூப்பர் ஸ்டாருக்கு ஏத்த சூப்பர் டூப்பருங்க

@@ அடுத்தது காதல் அனுக்கள் செம லவ்வாங்கியான பாடலுங்க

@@ இன்னும் ஆறு மாசத்துக்கு தேவையான எனர்ஜி பாடலுங்க

@@ ஸ்ரேயா கோஷலின் குரல் என்ன மாயம் அது ?????????????

@@ இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே ஃபுல் பீட் பாடல்,இதிலும் செம ரோபோட்டிக் அசத்தல்,ஆங்கில வரிகள் ரோபோவுக்கு ஏத்த ரேம்போ

@@ ரஹ்மான் எங்கிருந்துதான் புடிக்கிறாரோ இதையெல்லாம்

இந்த மூன்று பாடலையே தான் காலையிலேர்ந்து திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்,மீதியையும் கேட்டுட்டு சொல்றேனுங்க

இப்ப கேட்க ஆரம்பித்திருக்கிறது - பூம் பூம் ரோபோ டா...ரோபோ டா

ஒன்னு மட்டும் எல்லாருக்கும் சொல்லிக்கிறேனுங்க,பாடல்களை முழுசா கேளுங்க

முதல் நாள்-மொக்கையின் தோற்றம்

நேற்றைய துவக்க விழா - ஒரு மீள் பார்வை

*$* நாம் எதிர் பார்த்த படி முக்கால் வாசி மொக்கை பதிவர்கள் வந்துவிட்டார்கள்,வெங்கட் இன்று காலை தான் ஆஜராகியிருக்கிறார்

*$* மொக்கை போடுவது எவ்வாறு என்ற இலவச வகுப்பும் பயிற்சிப் பட்டறையும் நடத்த சங்கம் முடிவெடுத்துள்ளது

*$* மூன்று நாள் விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • முதல் நாளான இன்று : மொக்கையின் தோற்றம் பற்றி ஆராயப்படும்.
  • இரண்டாம் நாள் : மொக்கையை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோர் என்ற தலைப்பில் செயல்படும்.
  • மூன்றாம் நாள் : மொக்கை அமைச்சரவை பற்றி விவாதம் நடைபெறும்
நம் மொக்கை பதிவர் சங்கத்தை பாராட்டி பதிவர் நீச்சல்காரன் ஒரு பொற்கிழி ஒன்றை வழங்கியுள்ளார்,அது பொது மக்கள் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது

பரிசை வழங்கிய நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு மூன்றாம் நாள் பாராட்டு விழா நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

தோற்றம்


மேலாமல் பார்க்கப் போனால் என்ன பெரிய மொக்கை என்ற எண்ணம் தோன்றும்,ஆனால் அது ஏன் வந்தது எதனால் வந்தது என்று ஆராய்வதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மொக்கை என்ற வடிவம் தனியாகத் தோன்றி இந்தளவுக்கு வளர வாய்ப்பில்லை,அது ஒன்றிலிருந்து திரிந்து பின்பு தனியாக வளர்ந்திருக்கக்கூடும்

அதாவது ஒரு அதிரடி படம் எடுக்க திட்டமிட்டு அதற்கு தேவையான முயற்சிகளும்,செலவுகளும்,திறமைகளும் வெளிப்படவில்லையெனில் அது அரைகுறையாகத்தான் முடியும்,அது தான் மொக்கை ஆகியிருக்கலாம்

அரைகுறையான கவிதை,கதை,படம்,மனிதன்,இன்ன பிற.... எல்லாவற்றையும் தான் பொதுவாக மொக்கை என்ற பெயரில் வழங்குகிறோம்

மொக்கையின் தோற்றம் பற்றிய நம் சங்க கண்மணி கோமாளி செல்வாவின் ஆராய்ச்சி கட்டுரை இங்கே படியுங்கள்

மொக்கை - பெயர்காரணம்

மொக்கை என்ற சொல் பொதுப் பெயர்சொல்லாக வழங்கப்படுகிறது

மொக்கை என்ற சொல் இந்த நோக்கத்திலும் உருவாக்கப்பட்டிருக்கலாம்

மொக்கு + கை = மொக்கை

மொக்கு = அழகான பூவின் முந்தய வடிவம் (அல்லது) பூவின் அரைகுறை வடிவம்

ஆகவே ஒருவர் கவிதையோ,கதையோ எழுதப்போய் அது அரைகுறையாக இருக்குமாயின் அது மொக்கை என்று பெயர் பெறுகிறது

இன்று மான் ஆட்டில் விவாதிக்க வேண்டிய பொருள்

%
மொக்கை என்ற சொல் உருவாவதற்கான பல்வேறு சூழ்நிலைகள்,காரணங்கள்

% அழகான கவிதை மொக்கையாக மாறிய விதம்

அனைவரும் வாரீர் !!! வாரீர்

இடம் : புதிய பின்னூட்டத் திடல்

பின்.குறிப்பு : இன்றும் நாளையும் நடைபெரும் மிக முக்கியமான ஆராய்ச்சி அரங்கத்திலும்,கருத்தரங்கத்திலும் கலந்து கொள்ளும் மொக்கை பதிவர்களுக்கே கடைசி நாள் அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்கப்படும்

மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழா மற்றும் அகில இந்திய மான் ஆடு - 2010

பதிவர்கள் முன்னேற்ற கழகம்...

ப.மு.க என்ற கழகத்தை நிறுவி நம்மை போன்ற மொக்கை பதிவர்களுக்கு ஒரு சங்கம் அமைத்து கொடுப்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம்,அந்த கனவில் மண்ணை மட்டுமல்ல கல்,கமெண்ட் எல்லாம் போட்டு மூடினார்கள்

இதற்கு மூல காரணம் யார் என்பதை விசாரிக்க அண்ணன் சிரிப்பு போலீசு விசாரனை நடத்த சென்றிருக்கிறார்.

மேற்படி நம்மை போன்ற மொக்கை பதிவர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும்,நம்மையும் பதிவராக அங்கீகரிக்கவும் நாம் ஒன்று சேர வேண்டும்

அதற்காகத்தான் இந்த மொக்கை பதிவர்கள் சங்கம்(MBA-MOKKAI BLOGGERS ASSOCICATION)
மொக்கை பதிவர் சங்கத்தில் இனைவதால் ஏற்படும் நன்மைகள்

@ ஒன்னுமே இல்லாத பதிவுக்கும் 100 பின்னூட்டங்கள் சங்கத்திலிருந்து போடப்படும்(அதிலும் ஒன்னும் இருக்காது )

@ உடனடியாக இன்ஸ்டன்ட் திட்டத்தின் படி 20 ஓட்டுகள் சங்கத்தின் சார்பாக போடப்படும்

@ தாங்கள் சீக்கிரமே பிராப்ல பதிவராக வழி வகுக்கப்படும்

@ அனானிகள் தொல்லையிலிருந்து காப்பாற்ற நாங்களே சில அனானி கமெண்டுகள் போட்டு காப்பாற்றுவோம் (மொக்கை பதிவர் என்று நிரூபிக்க வேண்டாமோ)

மற்றவை மாநாட்டில் அறிவிக்கப்படும்

மாபெரும் மான் ஆடு- 2010

அலைகடலென வாரீர் ! வாரீர் !! வாரீர் !!!

மொக்கை பதிவர்கள் சங்கத்தில் தங்களுக்கு ஒரு சிறந்த பதவி அளிக்கப்படும்என்பதை வெறும்பய சார்பாகவும்,கோமாளி சார்பாகவும் தெரிவித்துகொள்கிறேன்

பதவிகள்,கொள்கைகள்,தீர்மானங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டும்,வாருங்கள் விவாதியுங்கள் !!!



பின்.குறிப்பு

## மாநாட்டிற்கு வரும் அனைவருக்கு அடுத்த பதிவில் சன்மானமாக 200 பின்னூட்டம் வழங்கப்படும்




எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1

வணக்கம் நண்பர்களே !!!

நானும் என் நண்பன் குத்தாலத்தானும் சேர்ந்து ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறோம் (இங்கயே கிழிக்க முடியல இது வேறையா)

அந்த பதிவிலும் தங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே !!!

எங்க ஊர் குத்தாலம்,அதனால் குத்தாலத்தான்'ஸ் என்று பெயர் வைத்து விட்டோம்,அந்த பதிவிலும் இனி என் மொக்கைகளை படிக்கலாம்,என் நண்பன் எனக்கு மேல செம மொக்கையா எழுதுவான்,படித்து பாருங்களேன் தெரியும்


"எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1 பதிவை படிக்க >>>>>

எனக்கு பிடித்த சில புதிய பதிவர்களை இங்கு அறிமுகப் படுத்தியிருக்கிறேன்,படித்துப் பாருங்கள்

நாங்களும் குத்துவோம்ல :)

என்னடா எல்லா குத்துகளும் முடிஞ்சிடுசேன்னு பாக்குறீங்களா,இல்ல இல்ல இன்னொன்னு இருக்கு , அதான் சும்மா இருக்குற சுவரை குத்துறது

இந்த செவுத்த குத்துறது ஒரு பெரிய ரிலாக்சேஷனுங்க...ஏன்னா செவுறு திரும்ப குத்தாதுல்ல (அட பெரிய கண்டுபிடிப்புதான்) ,என்ன வலிக்குமேன்னு பாக்குறீங்களா..உங்களுக்கு யாரையாவது குத்தனும்னு தோணுச்சினா அவங்கள நினைச்சிகிட்டு செவுத்த குத்தலாம் (ஏதோ நம்மாள முடிந்தது)





## என்ன பதிவெழுதுறது ரெண்டு நாளா யோசித்து யோசித்து செவுத்ததான் போட்டு குத்திகிட்டு இருந்தேன் ,அட இந்த ஐடியா வந்துடுச்சே :)

## எல்லா பொன்னுங்களுக்கு முன்னாடி உனக்கு அறிவு இருக்கான்னு மேடம் கேக்கும் போது மேடத்த குத்தனும்னு தோனும் ஆனா முடியாது அப்ப செவுத்ததான் குத்தனும்

## பரிட்சை எழுதும் போது பட்டுனு நம்ம பேப்பர பிடுங்கி,அவன் வச்சிக்கிகுவான், கேக்க போனா நாமலும் மாட்டிக்கனும்,அப்ப எத குத்தனும் போல தோணும் செவுத்த தான் :)

## அவனோட லவ்வர் வரும் போது,நாம பக்கத்துல நின்னா அவனுக்கு ப்ரெஸ்டீஜ் ப்ராப்ளம் அப்டி தள்ளி நில்லுன்னு சொல்லுவான்,அப்பவும் செவுத்ததான் குத்தனும்

## மாப்ள உன் எழுத்து அவ்வளவு அழகு சிற்பம் டா,பிரிண்ட் எடுத்த மாதிரி இருக்கு என்று ஐஸ் வைத்து நைட்டு ஃபுல்லா அவனோட அசைன்மென்ட்டையும் எழுத வச்சிட்டு போயிடுவான்,அப்பரம் என்ன நைட்டு ஃபுல்லா எழுதிக்கிட்டே குத்த வேண்டியதுதான் :(

## இந்த பொண்ணுங்களுக்கு செல்போன்ல பேலன்சே இருக்காது போல :) , நம்ம கிட்ட சுத்தமா பேலன்ஸ் இல்லாத போது தான், தொடர்ந்து 10 மிஸ்டு கால்,call me urgent அப்டின்னு மெசேஜ் அனுப்பி கொல்லும் போதும் செவுத்ததான் குத்தனும் :)

## ஒரு வாரமா நான் சைட் அடிக்கிற ஃபிகரு,இன்னக்கி புசுக்குன்னு இன்னொருத்தன் பைக்ல ஏறி போகும் போது செவுத்த தான் வெறிக்க வெறிக்க குத்த முடியும் :))

## ஒரு 50 கமென்ட்சு,50 ஓட்டு விழுந்திருக்கும்னு பதிவ ஓபன் பன்னுனா தொப்பி 3 கமெண்ட்சும்,5 ஓட்டும் விழுந்திருக்கும் அப்ப நச்சுனு செவுத்த குத்துனா ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும் (ஓ___,கமெ____போடாதவங்கள குத்துற மாதிரி ஒரு அலாதியான சுகம் )

ஹா ஹா ஹா !!!

என்ன பதிவு மொக்கையா இருக்குன்னு தோணுதா , உடனே செவுத்த குத்துங்க(அதாவது என்ன நினைச்சிகிட்டு)

இல்ல ஓட்டையாவது எனக்கு குத்துங்க :))

தோ(ழி)ழன் அப்டேட்ஸ்....

டிஸ்கி : அண்ணன் கார்க்கி அவர்களின் தோழி அப்டேட்சை படித்து படித்து, நாமளும் எழுதுவோமே என்று முயற்சி செய்தது :)


எதுக்கெடுத்தாலும் ட்ரீட் கேக்குறவன் நண்பன்...ட்ரீட்டுக்காகவே எதையாவது கேக்குறவன் என் நண்பன்

****************************************************************************

தோழி மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது, காதலின் மேல் அல்ல அவள் மேக்கப்பின் மேல்,கலையவே இல்லீங்க :)

*******************************************************************************
நண்பனுக்கு புது தோழி குறுஞ்செய்தி
அனுப்பியிருந்தாள்

என்ன செய்தி என்று வாங்கி படித்துக் கொண்டே
தோழி நம்பரை மனப்பாடம் செய்வான் இன்னொரு டகால்டி நண்பன்

********************************************************************************

மாப்ள உனக்கெத்தன அரியர்டா என்றுதான் கேட்டேன், நட்சத்திரத்த உன்னால என்ன முடியுமான்னு கேக்குறான்,என்னத்த சொல்ல :)

*******************************************************************************
தோழியின் சாப்பாடு டப்பாவை ஆட்டைய போட்டு ஆசையாக தயிர் சாதம் சாப்பிட திறந்தால் தனியாக அமர்ந்திருக்கிறது பர்கர் !?!

*******************************************************************************

நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இல்லை என்றேன், உமக்கு எடுப்பா இருக்கும் போட்டுக்குறீயா என்கிறாள் :(

*******************************************************************************

என் அலைபேசியில் இன்னொரு பெண்னின் பெயரை பார்த்துவிட்டு சீறினாள் யார் என்று ? என் சித்தி என்றேன் சிரித்தாள் :) பெருமூச்சுடன் :()

********************************************************************************

பௌர்னமி நிலாவை காட்டி "நிலவில் உன் முகம் தெரிகிறது" என்றேன்
அப்ப என்ன ஔவை பாட்டி என்கிறாயா,என் மேக்கப் அவ்வளவு மோசமாவா இருக்கு என்கிறாள்

*********************************************************************************

இப்படியும் ஆகுமா....

நண்பர்களே இந்த பதிவை போல தோழியையும்,தோழனையும் ஒன்னா வைக்காதீங்க , அப்பறம் அவ்வளவுதான் :)


பதிவுத் திருட்டு - உஷார்

நேற்று வானம்பாடிகள் ஐயாவின் பதிவில் அலெக்சா ரேட்டிங்கும் அல்லக்கைகளும் என்ற பதிவை படித்தேன்.அதில் பதிவர் சூர்யா கண்ணன் அவர்களின் கூகுள் கணக்கு அனைத்தும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் அவர் பதிவும் முடக்கபட்டுவிட்டதாக கூறுயிருந்தார்.


சூர்யா கண்ணன் அவர்களின் பதிவு எப்படிப்பட்ட பதிவென்பது நாம் அறிந்ததே,நம்மை போன்ற பதிவர்கள்,கணிப்பொறி துறை மாணவர்கள்,கணிப்பொறி வல்லுனர்கள் போன்ற அனைவரும் சூர்யா கண்ணன் பதிவுகளின் மூலம் பயன் பெற்று வந்தோம்

இன்று அந்த பதிவே இல்லை என்கிறது

எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, பதிவிலேயே மீட்டெடுக்க சில வழிகளை பதிவுலக நண்பர்கள் அளித்திருக்கின்றனர், நண்பர்களே உங்கள் யாருக்காவது ஏதேனும் வழிகள் தெரிந்தால் சொல்லி உதவுங்கள் ,நமக்கு அந்த பதிவு தேவை.

அந்த பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் அஹமது இர்ஷாத் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்

உங்கள் ஆக்கங்கள் யாரால் திருடப்பட்டிருக்கிறது என்று அறிய இத்தளத்தில் உங்கள் வலை முகவரியை கொடுத்தால் உடனே சொல்லி விடுகிறது.. http://www.copyscape.com/

அந்த இனையதளத்திற்கு சென்று என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என சென்றேன்

முகப்பு பக்கத்திலேயே எனது வலைதள முகவரியை கேட்டிருந்தார்கள்,கொடுத்து தேடினேன்,ஒன்றும் இல்லை,பதிவின் வேறு பக்கங்களை தேடிப் பாருங்கள் என்ற செய்தியும் வந்தது.

நானும் அடுத்தடுத்த பதிவை கொடுத்து எங்காவது திருடப் பட்டுள்ளதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய உலகம் எப்போது அழியும் என்ற பதிவின் முகவரி கொடுத்து தேடும்போது,இந்த பக்கத்தில் உள்ள தகவல்கள் இன்னொரு தளத்துடன் ஒத்துப் போகிறது என்ற தகவல் வந்தது

அந்த தளத்தில் நுழைந்து பார்த்த போது தெரியவந்தது,என்னுடைய அந்த பதிவு திருடப்பட்டிருப்பது

மீனகம்.காம் என்ற வலைதளத்தில் தான் இந்த திருட்டு வேலை நடந்திருக்கிறது,நான் அந்த பதிவை போட்டது ஜீன்.30 ஆம் தேதி,அந்த பதிவில் ஜீலை 1 ஆம் தேதி திருடிப் போட்டிருக்கின்றனர் .

என்ன ஒரு கேவலமான வேலை,ஒருத்தர் அறிவை,ஒருத்தர் முயற்சியை இப்படி சல்லித்தனமாக காப்பி & பேஸ்ட் செய்வது என்ன மோசமான செயல்

என்னுடைய உலகம் எப்போது அழியும் பதிவு

திருடப்பட்ட பதிவு -மீனகம்.காமில்

கண்டிப்பாக உங்கள் பதிவுகள் கூட திருடப்படவும்,திருடப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது,அதனை தீர்த்துக் கொள்ள இந்த தளத்திற்கு செல்லவும் உங்கள் பதிவின் முகவிரியை கொடுத்து தேடிப் பாருங்கள்.

இந்த பதிவுத் திருட்டிலிருந்து தப்பிக்க சில வழிகளை நம்ம ஜெய்லானி அண்ணன் பதிவில் கூறியுள்ளார்,அதையும் பாருங்கள்

இனிவரும் காலங்களில் இந்த பதிவுத் திருட்டை தடுக்க என்ன செய்யலாம் ? சொல்லுங்கள் நண்பர்களே !!! சொல்லுங்கள்

போண்டா வடையும் - பாக்கெட் கவிதையும்

** இந்த வார போண்டா **

எங்கெங்கும் காணினும் போலியடா

தமிழ்நாடு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கா சேர்கை கலந்தாய்வில் பல மாணவ-மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பயன்படுத்தி விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது

பொறியியல் சேர்க்கை - 50 போலி சான்றிதழ்களும்மருத்துவ சேர்க்கை - 10 போலி சான்றிதழ்களும்

இது முதல் முறையாக தமிழகத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது,இதற்கு முன்னரும் இது போன்ற போலிக்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது
மருத்துவ கலந்தாய்வில் இருந்த 10 போலி சான்றிதழ்களில் 9 பெண்களுடையதாம்.

இது தொடர்பாக இருவர் கைதும் செய்யபட்டுள்ளார்கள்,அவர்களின் விசாரித்ததில் அவர்கள் 500 க்கு மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்திருக்கிறார்களாம்,பார்ப்போம் இன்னும் எவ்வளவு வெளிவருகிறது என்று ????

*** மிச்ச மீதி வடைகள் ***

* இந்தியாவின் முதல் உலாவி என்று ஒன்று கிளம்பியுள்ளது,EPIC BROWER
பிரபல நிறுவனம் மொசில்லா இதை வெளியிட்டுள்ளது

தீம்சுகள் மற்றும் சைடுபார் வசதி தான் இதன் சிறப்பம்சம்

ஓவர் லோடு ஏற்றப்பட்ட லாரி போல் மெதுவாகவே இயங்குகிறது

தரவிறக்க

* டெஸ்ட் பூட்டிகளிளிருந்து ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் அதிரடி
ஆட்டக்காரர் அப்ரிடி

* இந்திய ரூபாய்க்கான சின்னம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,அதில் ஹந்தி எழுத்து மட்டும் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம்,விரைவில் சின்னம் வெளிவருமா ??

* சோனியா என்ன சொன்னாலும் சரி நான் மக்கள் பயணம் சென்றே தீருவேன் என்கிறார் ஜெகன் (ஆந்திரா)


பாக்கெட் கவிதை

உன்னோடு பேசாத
நாட்கள் இல்லை
சீண்டாத நொடிகளும் இல்லை

உன்னை பிரிந்த நேரங்கள்
யாருமில்லா காட்டிலலைவது போல்
தனிமையயே
உணர்கிறேன்

நான் உறங்கிய பிறகு தான்
நீ
உறங்குவேன்
என்கிறாய்

நான்
சற்று வறுமையில்
இருக்கறேன்
என்பதயே
நீ
சொல்லித்தான்
அறிந்து கொண்டேன்
"உங்களிடம் குறைவான தொகையே உள்ளது"

*** அலைபேசி ****

விஜயும் தமிழனும்

வேலாயுதம்.....ஆரம்பம்


வேலாயுதம் - என்ன இது கழுகா,மைனாவா,இல்ல மடயானா (அதேதான்)
என்ன எழவோ சின்ன புள்ளங்க பயப்புடாம இருந்தா சரி.....

இதுவரை ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த விஜய்....
இந்த படத்தில் அவரே இறக்கை கட்டி பறப்பார் என எதிர்பார்கப்படுகிறது(ஹா ஹா ஓடுங்க)

தமிழனென்றால் யார் ?

இதற்கு ட்விட்டரில் ஒரு வரியில் கிடைத்த பதில்கள்

iamkarki

பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன்

kangon

தமிழை வாழ்த்தும் மாநாட்டில் ஆங்கிலத்தில் கதைத்து தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்துபவன் #தமிளன்

kusumbuonly

ஆக்ஸ்வலி
என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன்

kaattuvaasi

"மானாட மயிலாட" பாக்கும்போது யாராவது வேட்டிய உருவுனாக்கூட "ஆடாம அசையாம" உக்காந்து இருக்குறவன்தான் தமிழன் #தமிளன்

gkarthy1

தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன்

aayilyan

தன்
புடிச்ச முயலுக்கு த்ரீ லெக்ஸ் ஒன்லின்னு சொல்றவன் #தமிளன்

jillthanni

தமிழ் என்ற ஒரே வார்த்தைக்கு 500 கோடி செலவு செய்பவன் #தமிளன்

நீங்க சொல்லுங்க தமிழன் யாருன்னு ? பின்னூட்டத்தில்

✍ நுழைவுத் தேர்வு அனுபவங்கள்...

மூனு வருசம் முக்கி முக்கி படிச்சி B.sc முடிச்சாச்சி, கடைசி செமஸ்டர் ரிசல்ட்டும் வந்துச்சு, நல்ல வேளை அரியர் ஒன்னும் விழல,சரி அடுத்தது என்னான்னு யோசிச்சா,கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் தெரிஞ்சது MCA மட்டும் தான்,திரும்ப மூனு வருசம் படிக்கனுமாம் அதான் பிரச்சனையே :(

சரி நாம பாக்காத படிப்பா,அதையும் பாத்துடுவோம்னு போணோம்,இந்த MCA வுக்கு tancet,tancet ன்னு நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள் (ரெண்டு தேர்வான்னு கேக்க பிடாது ).அதுல ஒரளவுக்கு மார்க் எடுத்தா தமிழ்நாட்டுல உள்ள முன்னனி கல்லூரி எதுலயாச்சும் கண்டிப்பா இடம் கிடைக்கும்,அங்கெல்லாம் 100 சதவீதம் campus placement தருவாங்கன்னு ஆசைய வேற கிளரி விட்டுட்டாயிங்க :)

சரி உடனே அந்த நுழைவுத் தேர்வுக்கும் அப்ளை செய்தேன்,அதோடு சரி என்னுமோ பிரிப்பேர் வேற செய்யனுமாமே,நாங்கெல்லாம் செமஸ்டர்க்கே தூங்கி எழுந்து அப்டியே போற ஆளுங்க,இது என்ன பிஸ்கோத்து பரிட்சை :)))

அந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளும் வந்துச்சி,கூட்டமா போனோம்,அண்ணாமலை பல்கலையில் தான் நடந்தது,சீக்கிரமா போய் உருப்படியா சைட் மட்டும் தான் அடிச்சோம்(நமக்கு வேற என்ன தெரியும்)

அவனவன் ஃபார்முலா,அது இது லொட்டு லொசுக்குன்னு கடைசி நேரத்துல விழுந்து விழுந்து படிச்சிகினு இருந்தானுவோ, நாங்க சாவகாசமா கால ஆட்டிகிட்டு அவனுகள பாத்து சிரிச்சிகிட்டு இருந்தோம்(எவ்வளவு கஷ்டமான வேலை தெரியமா)

பரிட்சை நேரமும் வந்துச்சி,என் ஹால பார்த்து போய் உட்கார்ந்தேன்,சோத்தாங்கை பக்கம் ஒரு அட்டு பிகரு ஒக்காந்திருந்துச்சி(அந்த பக்கம் திரும்பவே முடியல),முன்னாடி பய புள்ள ஒருத்தன்,ஆனா எனக்கு பக்கத்து சீட்டு மட்டும் காலியா இருந்தது.

பென்சில தீட்டிக்கிட்டு இருந்தேன்(அப்பரம் மூளையா இருக்கு தீட்ரதுக்கு) ,EXCUSE ME SIRன்னு வெளியிலிருந்து ஒரு சத்தம்,யார்னு பாத்தா ஒரு செம செம ஃபிகர்,சட்டுனு உள்ள வந்து என் பக்கத்துல ஒக்காந்துச்சி(புரியுது கொஞ்சம் கேப் விட்டுத்தான்).எனக்கு ரொம்ப சந்தோசம்

இந்த ரெண்டு மணி நேரம் பொழுத போக்குறதுக்கு இத விட நல்ல ஐடியா இருக்க முடியாது,கொஸ்டின் பேப்பர் கொடுத்தாங்க,ஆன்சர் பேப்பரும் கொடுத்தாங்க,கொஸ்டின் பேப்பர பிரிச்சி நமக்கு தெரிஞ்ச ஒரு கேள்வி கூடவா இருக்காது பிரித்தேன் (ஆமாமாம்)


தேடினேன் தேடினேன் ஆங்கில இலக்கணத்தில் தேடினேன், கனிதத்தில் தேடினேன்,கணிப்பொறி பிரிவில் தேடினேன்.ஒன்ணே ஒன்னு தெரிந்தது என்ன REGISTER NUMBER ன்னு ஒன்னு கேட்டிருந்தாங்க,அத ரொம்ப ஈசியா எழுதிட்டேன்,ஹால் டிக்கெட்ட பாத்தே (அடடா இது தான் உள்வளத் திறமையா)

ஒரு எழவும் தெரியல,அரை மணி நேரம் வீணா போனது தான் மிச்சம்(ஆமாம் மிச்ச நேரத்துல கிழிச்சிட போறாறு),சரி பக்கத்துல உக்காந்திருக்குற பொன்னயாவது பாப்போமே ன்னு பாத்தேன்,என்ன கொடும அது கணக்கெல்லாம் போட்டுப் பாக்குது அந்த புள்ள(ரொம்ப பேட் கேர்ள்)


1 மணி நேரம் இப்டியே ஓடுச்சி, அப்போதைக்கு ஒரு திடீர் ஞானோதையம் இங்க நடந்ததையெல்லாம் நம்ம பதிவுல போட்டா எப்டி இருக்கும் ? போட்டா ஒரு முப்பது ஓட்டு விழாது (ஆமாம் ரொம்ப முக்க்கியம்),இப்டி யோசிச்சிகிட்டே ஒரு அரை மணி நேரம் தூங்கிபுட்டேன்(கண்ண தொரந்துகிட்டே)

திடீர் மணி அடித்தது என் மண்டைக்குள்ளும் தான்,கடைசி அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு எழுத வேண்டிய கேள்விகள் மீதமிருப்பது 100 மட்டும் தாம் (மொத்தமே அதுதானே)

சரி நம் அறிவுக்கு சரியான் டெஸ்ட் தான் (அது இருக்கா),இனிமேல் யோசிச்சி எழுதுனா 10 கூட எழுத முடியது,யோசிச்சேன்(மூக்குல கைய வச்சிகிட்டு தான்) :)

கொஸ்டின் பேப்பர ஓரமா வைத்துவிட்டு,ஆன்சர் ஷீட்ட மட்டும் எடுத்தேன்,எல்லாமே கொள்குறி வகை கேள்விகள்(choose the right answer) தான் என்பதால்,என் அறிவை பயன்படுத்தி D,A,B,C,A,D,C,B,C,A,D கால் மணி நேரத்தில் 50 வினாக்களுக்கு இப்படியே விடையளித்து விட்டேன்(மிகப் பெரிய சாதனை தான்),மீதம் 50 சாய்ஸ்ல விட்டுடேன்(என்னோட சாய்ஸ்தான்)

இதுல என்ன கூத்துனா தவறான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் வேற எடுப்பானுங்களாம்,அடக் கொடுமையே நமக்கு வர்ரதே ஒன்ணோ ரெண்டோதான் அதையும் எடுத்துட்டா !! எங்க போறது (துபாய்க்கு)

பரிட்சை முடிச்சி வந்தா அவனவன் ஆன்சர் சொல்லிப் பாக்குறானுவோ,ஹா ஹா நமக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல!!

ஒருத்தன் சொன்னான் கன்ஃபார்மா 30 என்றான்,இன்னொருத்தன் 22 என்றான்,நான் சிரிச்சிகிட்டே எனக்கு -3 என்றேன் (உண்மைதானே)

சரி எழுதியாச்சு ரிசல்டும் வந்தது,மார்க பாத்தா எல்லாம் தலைகீழ் , 30 சொன்னவனுக்கு 3 தான் வந்துச்சி,-3 (நான் தான்) சொன்னவனுக்கு ஹாஹா +13 மார்க் (ஆண்டவன் நல்லவங்கள கைவிட மாட்டான் ஹா ஹா),செம சிரிப்பு தான் எனக்கு :))

எவண்டா எனக்கு +13 போட்டதுன்னு எனக்கு டவுட்டு வேற,அதனால ரிசல்ட் உண்மையான்னு ஒரு பத்து,பதினைந்து தடவையாவது பாத்திருப்பேன்(நம்பவே முடியல)

எல்லா பயலுவோலும் கேட்டானுங்க எப்டி டா எடுத்த வெரி குட் டா, நான் சொன்னேன் அதெல்லாம் புத்திசாலிங்களாலதான் முடியும் டா(ஒத்தயா ரெட்டயா போட்டதுல வந்ததுன்னு சொல்லிடுவேணா)

நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் ,அதனாலதான் என் மார்க் ஸ்டேட்மன்டையே இங்கே போட்டுட்டேன் (நேர்மை,பொறுமை,எருமை)

இவ்வளவு பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி !!!

♥ ஏமிக்கு ஒரு காதல் கடிதம் ♥


உனை முதன் முதலில்
பார்த்தேன்
✔ சென்னையில்

அத்தனை பேர்
இருக்க
என்னை மட்டும்
ஏன் அப்படி பார்த்தாய் :)


பார்த்ததோடு விட
வேண்டியதுதானே
இந்த மர மண்டையில்
♪ பூக்கள் பூக்கவும் ♪ வைத்தாய்

நீ தமில் கற்றுக் கொண்டதே
என்னிடம்
பேசத் தானா !!

எனக்கு குஸ்திலாம்
போட தெரியாது ✖
சொல்லு
உனக்காக
மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் !!

வாம்மா
துறையம்மா ☂
வாசல் தாண்டி
வாயேம்மா !!

ஆருயிரே
ஆர்யாவையும்
அழைத்து வா
நிரூபிக்கிறேன்
யார்
'பல'சாலி ♖ என்று

சீக்கிரம் ட்விட்டு ✝
நாம்
சந்திக்கபோகும்
அந்த நாளை

மதராசபட்டினத்தில்....

வந்தே மாதரம் ! வந்தே மாதரம் என்று ட்ரைலர் பார்த்த போதே சீக்கிரம் பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து இன்று காலை ஷோ போனோம் - மதராசப்பட்டினம் படத்திற்கு

எங்க ஊர்ல டிக்கெட் பால்கனி 60 ரூபாய் அது நமக்கு சரி பட்டு வராது,சரி முதல் கிளாஸ் 50 ரூபாயாம்(அதுவும் நான் கொடுக்கல),ஒரு வழியா டிக்கெட் எடுத்து உள்ள போயி ஒரு நல்ல சீட்ட போட்டு உக்காந்தோம்

அதெல்லாம் அப்பறம் சொல்றேன் எங்களை 1945 க்கு அழைத்து சென்ற மதராசபட்டினம் குழுவினருக்கு
ஒரு
கோடி பாராட்டுக்கள் !!!

எனக்கு தெரிஞ்சி ஒரு மூணு பேர் விமர்சனம் ஏற்கனவே போட்டிருக்காங்க அதை பாருங்க

ஜெட்லி
டம்பி மேவி
மகேஷ் - ரசிகன்

படமும் போட்டாச்சி அங்கு நான் ரசித்தவைகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

* வேற எதுவுமே வேண்டாம் நம்ம கதாநாயகி ஏமியை பார்ப்பதற்க்ககாவே இந்த படத்த பாத்தாகணும்,அப்படியொரு அழகுங்க அந்த பொண்ணு ,லண்டன் இறக்குமதி -சான்சே இல்ல :)

கீழ இருக்காங்க பாருங்க,அடடா !




* டைட்டிலே வித்தியாசமாகத்தான் இருந்தது ,இந்திய வரைபடத்தில் கலைஞர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டதை போல இருந்தது

* 1945 சென்னை அதான் மதரசப்பட்டினத்தை என் கண்முன் வந்து நிறுத்தியிருந்தார்கள்,ஒரு எதிர்ப்பார்போடு பார்த்தேன்

* நம்ம நாயகி ஏமி கிழவியாக 2010-இல் கதை தொடங்குகிறது,நாயகியின் பேத்தி கூட நல்ல தான் இருந்தது granny granny என்று சொல்லிக் கொண்டு

* நம் நாயகன் ஆர்யா அசல் மல்யுத்த வீரராகவே மாறிவிட்டார்,அப்படியொரு எதார்த்தத்தை பார்த்தேன்

* நாயகிக்கு மொழி பெயர்ப்பாளாராக வரும் மறைந்த ஹனிபா அருமையான நகைச்சுவைகள் செய்திருப்பார் (அவர் இறந்துவிட்டார் என்பதே படத்தில் போட்ட பிறகு தான் எனக்கு தெரியும்,ரொம்ப மோசம் )

* ஹனிபா நம்ம நாயகிகிட்ட தனக்கு ஐந்து தாய் மொழிகள்(five mother tongues) என்பார்,அதற்க்கு நாயகி you mean five mothers,ஆங்கிலத்தில் வந்தாலும் செம சிரிப்பு தான் அந்த காட்சிகளில்

* முதல் பாதி அவ்வளவு காமெடி தாங்க,அசத்தல் !!

* மழை வரும் போது ஒருவர் மழை வருது,மழை வருது என்று கத்திக் கொண்டே ஓடுவதும் ,மேல ப்ளைன் போனா குண்டு போடறான் !! குண்டு போடறான் என்று கத்திக் கொண்டே ஓடுவதும் அந்த காலத்தை காட்டுகிறது ,சிரிப்பு தான்

* வெள்ளைய போலீசுக்கும் நாயகனுக்கும் ஒரு போட்டி நடக்கும்,உணர்ச்சி மிக்க போட்டியாக இருந்தது,ஆர்யா முதல் அடி அடித்ததும் எம்.எஸ்.பாஸ்கர் சொல்வார் "400 வருசத்துக்கு பிறகு நாம அடிக்கிற மொத அடி"

* ஏமி தமிழ் கற்றுக் கொள்வதும் ,ஆர்யா ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் செம கலாட்டா தான்

* இரண்டாம் பாதி அவ்வளவு வேகம்

* வெள்ளையர்களின் தந்திரங்களையும் நிறையவே காட்டி இருக்காங்க

* அப்பறம் இசை G.V.பிரகாஷின் அடுத்த மாஸ்டர் பீஸ் என்றே சொல்லவேண்டும் ,பின்னணி இசை அடடா ரகம் !!

* ரூப் குமார் பாடிய "பூக்கள் பூக்கும் தருணம்" வழக்கம் போல் உருக வைத்திருக்கிறார்

* இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த தருணத்தை அருமையாக படமாக்கியிருக்கிறார்கள்

* ஹரிஹரனின் குரல்களில் வரும் "காற்றிலே" பாடல்,ம்ம்ம் என்னவொரு உணர்ச்சிமயமான பாடல்

* நாயகனும்,நாயகியும் தப்பி ஓடிக்கொண்டிருக்கும் போது சுதந்திரம் கிடைத்ததை ஊரெங்கும் கொண்டாட்டத்தில் ஒரு முதியவர் ஏமிக்கு நம் தேசிய கோடியை குத்தி விடுவார் , அங்கு ஒரே கரகோஷங்கள் தான் !!!

* படம் முழுக்க முழுக்க பார்க்க வேண்டிய பொக்கிஷம் !!!

* நான் பார்த்த உணர்ச்சிமயமான படம்,விடுதலை உணர்வுகள் நம்மையும் துள்ளி குதிக்க வைக்கிறது

* கிளைமாக்சும் எதிர் பார்க்காதது தான்

* ISO(1945:2010) certified movie :)

* படம் முடிந்த பிறகு பழைய மதரசப்படினத்தையும்,இன்றைய மெட்ராஸ் சிட்டியையும் ஒப்பிட்டு காட்டுவாங்க,அதையும் மறக்காம பாருங்க

* நீங்க எல்லோரும் குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம் !!! முதல்ல படத்த போய் பாருங்க,நாளக்கி ஞாயிற்றுக் கிழமை தான் !!!

கடவுள் என் மட்டில்

டிஸ்கி : கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே

"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?



"மனிதன் தான் கடவுளை படைத்தான்" இது என் கருத்து தான், அதனால் தான் மனிதனை போலவே கடவுளும் இருக்கிறார்

பாருங்க எல்லா ஆங்கில்லையும் போட்டோ எடுத்துக்க என்று நடராஜர் தான் காலை தூக்கிட்டு நின்றிருப்பாரா இல்லை சரஸ்வதி குளோசப் போட்டோ சரியாய் விழலன்னு இன்னொரு டேக் போயிருப்பாங்களோ,சாத்தியமே இல்லையே

மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்

அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்

"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்

நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?

முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்

ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!


நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று

அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்


இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்

அபுதாபியில் கடற்கன்னி( ஃபார்வட் மெயில் )

கடற்கன்னிகள் (mermaids) என்பது வெறும் கட்டும் கதை தான் ,ஆனால் இங்கு பாருங்களேன் !!

உலக
வரலாற்றில் முதன் முதலா கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலாக் ம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.

படங்களில் இப்படித்தான் கடற் கன்னிகளை பார்த்திருக்கிறேன்(செம பிகரா )

இத பாத்தா கடற் கன்னி போலவா இருக்கு ?

எதோ ரப்பர்ல செய்தது போல் இருக்கிறது


அம்மா பயமா இருக்கு :( உண்மையிலேயே கடற் கன்னி தான்

கண்ட மேனிக்கு போட்டோ எடுத்து தள்ளி இருக்கானுங்க


இந்த விஷயம் எனக்கு நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது

ட்விட்டரில் ரசித்தவை (04-07-2010)

இந்த ட்விட்டரில் நச்சுன்னு நாலு வார்த்தையில் பலர் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்,அவற்றில் நான் ரசித்த ட்வீட்கள் சில


அதிஷா(athisha@twitter.com)

தோனிக்கு நிச்சயதார்த்தம் ஆகிருச்சாமே! அய்யோகோ தானைத்தலைவி லட்சுமி ராய் இனி என்ன செய்வாங்க!

ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறைய நீ விலக்கு - go #spa go!

விஜயசாந்திய கைது பண்ணிட்டாய்ங்களாம்.. ஏய் ஏய்.. சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா.

காட்டுவாசி(kaattuvaasi@twitter.com)


நண்பரொருவர் திருமணநாள் என்று இனிப்பு கொடுத்தார். எத்தனையாவது கல்யாணநாள் என்று நான் கேட்க,ஒரே ஒரு கல்யாணம்தான் சார் பண்ணியிருக்கேன் என்றார்

தமிழகம் முழுதும் போலி டாக்டர்கள் கைது : அப்படியே போலி எழுத்தாளர்களையும் கைது பண்ணுங்க சார்... உங்களுக்கு புண்ணியமாப்போகும்...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கப் போன பைத்தியக்கார வைத்திக்கு பைத்தியம் எழுதினத படிச்சு பைத்தியம் புடிச்சிடுச்சாம்

யூத்துன்றது யாரு?? செத்துப்போய் நரகத்துக்கு போனாலும் கூட வர்ற நண்பனை சொரண்டி "மச்சான்... எமனோட பொண்ணப்பாருடா..ம்ஹீம்" அப்படின்றவன்தான்.


ஜில்தண்ணி (இது நான் தானுங்கோ-jillthanni@twitter.com)


இப்ப சிவப்பு சாமியும் மாட்டிக்கிச்சா,சூரியனுக்கு ஒரு வீடியோவும் கிடைக்கலையாம் அதான் இப்படியா...

சீக்கிரம் யாராவது கேட்ச் பிடிங்கயான்னா மாட்டேன்குரானுவோ ,என்னுமோ கால்ப்பந்தாமே,சரி கேட்ச் வேணாம் போல்டு ஆக்கிட வேண்டியதுதானே

அவள் மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது காதலின் மேல் அல்ல அவ மேக்கப்பின் மேல்--கலையவே இல்லயே
பதிவுப் படம்



ஆஹா எம்மாம் பெரிய கை,இது கால் பந்தாசே (ஹி ஹி ஹி )

Related Posts with Thumbnails